செவ்வாய், 28 ஏப்ரல், 2009

முத்திரைப்படத் திறனாய்வு

யாவரும் நலம்

பல நாட்களுக்குப்பின் குடும்பத்தோடு பார்க்க வந்திருக்கும் ஒரு படம்.குடும்பத்தோடு பார்க்க விழைவதானால் சில பிழைகளைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்எடுத்துக்காட்டுகள்தொலைகாட்சிக்கு பேய் பிடிப்பது,தொலைக்காட்சி திட்டுவது போன்றவை.

கதையுடைத்தலைவன்1 நன்றாக நடித்திருக்கிறார்பாடல் இசையினைவிட பின்னணி இசை படத்திற்கு மெருகளிக்கிறதுஇருமொழிகளில்2 வந்திருக்கும் இப்படம்மக்களை அச்சுறுத்தி மகிழ்விக்கும் திரைக்கதையுடையது.

பலதிருப்பங்களோடு வரும் திரைக்கதை மூளையுடைய சுவைஞர்களையும் நிமிர்ந்து அமரவைக்கும்படத்தின் முதன்மை ஊக்கிகள்திரைக்கதை,கதையுடைத்தலைவன் நடிப்புஒளிப்பதிவுபின்னணி இசைநல்ல படம்;குடும்பத்தாரோடு சேர்ந்து அச்சுரலாம்.

தலைவன் தவிர மற்றவர்களுக்கு3 நடிக்கும் வாய்ப்புக் குறைவே.

வாரணம் ஆயிரம்

படத்தின் இயக்குனர்4 தனது தொடர்புடைய இசையமைப்பாளரோடு5 பூசல் கொண்டு எடுத்திருக்கும் படம்அவரது முந்தைய படங்களோடு6ஒப்பிடும்பொழுது சரியான இழுவைதான் இப்படம்இசையமைப்பாளர் பூசல்கொண்டிருப்பினும்இசையில் அதைக்காட்டவில்லை.

படத்தைத் தூக்கி நிறுத்துபவை கதையுடைத்தலைவரின்7 நடிப்புஇசைபின்னணி இசைஒளிப்பதிவு ஆகியவைதள்ளிவிடுபவை இயக்குனரின் திரைக்கதை,நெறியாள்கைஆங்கில உரையாடல்கள்இயக்குனர் தான் படித்த கல்லூரியினையே8 கதையில் கதையுடைத்தலைவன் படித்ததாகக் கூற பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழ்ப்பெயர்களயே இதுவரை தன் கதைமாந்தர்களுக்குச்9 சூட்டிவந்த இயக்குனர் ஆங்கில வெறியுடன் செயற்பட்டிருப்பது என் போன்ற தமிழ் விரும்பிகளுக்கு வருந்தமளிக்கிறது.

மூன்று கதையுடைத்தலைவிகளில்10 இறந்து போபவர்11 பதுமை போல வந்து இரவல் குரலில்12 உரையாடுகிறார்நடனம் செய்கிறார்ஆனால் நடிப்புஅது மட்டும் கேள்விக்குறியாகி விடுகிறதுஇவர் அகவையிலும்உயரத்திலும் கதையுடைத்தலைவனைவிட அதிகமாகவே இருப்பதால்இவர்களிடையேயான வேதியியல்13 பரிமளிக்கவில்லை.

தலைவனின் அம்மாவாக முன்னாள் தலைவி14 இவரும் சற்று நடித்திருக்கிறார் என்று சொல்லலாம்மற்றபடி தலைவனுக்கு முதன்மைதரும் இக்கதையில் இவருக்கு அவ்வளவாக வேலையில்லைபடம் முழுக்க ஆங்கில உரையாடலை பரப்பிவிட்டுபடத்தின் இறுதியில் தலைப்புக்கு விளக்கம் தருவது தமிழன்னைக்கு இழுக்கு.


சக்கரக்கட்டி

இரஃமான் இந்தியாவின் முதன்மை இசையமைப்பாளர்உலகின் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர்எவ்வளவு நொந்து கொண்டு இப்படத்திற்கு இசையமைத்திருப்பாரோ தெரியவில்லைகுறுவட்டிலேயே இப்படத்தினைப் பார்க்க இயலவில்லைபழையகாலத்து முக்கோணக்காதல் கதைதான்.தயாரிப்பாளரின் பணத்தினை வீணாக்க வந்திருக்கும் படம்படத்தின் இயக்குனர்15படம் எடுத்துப்பழகிக் கொண்டிருக்கிறார்.

கதையுடைத்தலைவனாகக் காட்டப்படுபவர்16 ஆங்கில வழி17 கல்வி கற்றவர் போலும்தமிழே பேசத் தெரியவில்லைபடம் முழுக்க ஆங்கில வெறி இழையோடிக் காணப்படுகிறதுஒருதலையாகக் காதலிக்கும் தலைவிக்கு18இரவல் குரல் கொடுத்திருப்பவர் குரல்19 அவ்வளவு சரிவர பொருந்தவில்லை.படத்தின் உருப்படியான ஒரேசெய்தி இசையமைப்பாளர் இரஃகுமான் மட்டுமே.


1மாதவன்

2தமிழ்வடமொழி

3தலைவி நீது சந்திரா(பின்னணிக்குரல் சின்மயி)

4கௌதம் வாசுதேவ் மேனன்

5ஹாரிஸ் ஜெயராஜ்

6காக்க காக்கவேட்டையாடு விளையாடு

7சூர்யா

8திருச்சி மூகாம்பிகை கல்லூரிமெக்கானிகல் இன்ஞினியரிங்

9காக்க காக்க அன்புச்செல்வன்பாண்டியாவேட்டையாடு விளையாடு-கயல்விழி

10சிம்ரன்,சமீரா ரெட்டி,திவ்ய ஸ்பந்தனா

11சமீரா ரெட்டி

12பின்னணிப்பாடகி சின்மயி

13Chemistry

14சிம்ரன் (குரல் தீபா வெங்கட்)

15கலாபிரபு

16சாந்தனு பாக்யராஜ்

17English Medium

18வேதிகா

19பின்னணிப்பாடகி சின்மயி

வியாழன், 23 ஏப்ரல், 2009

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடும் நிலா பாடிய ஒரே பாடல்.

தனது பெயரினை எப்பொழுதுமே பாதி ஆங்கிலத்தில், படத்தின் தலைப்பில் பெற்றிருப்பவர் Harris ஜெயராஜ்.ஏனோ தெரியவில்லை இவரது இசையில் பாடும் நிலா பாலு ஒரே ஒரு பாடல்தான் பாடியிருக்கிறார். அது மிகவும் அருமையான பாடல். அந்தப்பாடல் நன்றாக வந்திருந்த போதிலும் அதற்குப்பின் குறிப்பிட்ட இசையமைப்பாளர் இசையில் அவர் பாடவே இல்லை. அதற்கான காரணமும் இசைவிரும்பிகளுக்கும் தெரியவில்லை.

இந்தக்கட்டுரை வந்த பிறகாவது பாடும் நிலா குரல் அவரது இசையில் ஒலிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.இது இசையமைப்பாளருக்கு இழுக்கே தவிர, பாடும் நிலாவுக்கு அன்று. இப்பதிவினைப் படிக்கும் இசைவிரும்பிகள் இதற்கான காரணத்தினைக் கூறினால் நன்றாக இருக்கும்.

அது அருளில்(விக்ரம் - சோதிகா) வரும் பட்டுவிரல் எனக்கு... எனத்தொடங்கும் அருமையான பாடல். சொர்ணலதாவோடு சேர்ந்து பாடியிருப்பார் பாடும்நிலா. பாடலில் மேல்நிலைகளில் அவருக்கே உரிய அணுக்கங்களோடு அணி செய்திருப்பார். அது விக்ரமுக்கும் செம்மையாய்ப் பொருந்தி வரும்.

வளர்ந்து வரும் இசையமைப்பாளரான இவர் தமிழைக் கொலை செய்யும் பாடகர்களுக்கு வாய்ப்புத்தந்து வருகிறார். சோதி நெறஞ்சவ .. சொன்னவுடன் சமஞ்சவ.. (சுக்வீந்தர் சிங்கின் தமிழ்க்கொலையில் 12பி பாடல்)ஒர் எடுத்துக்காட்டு.

தனது படங்களிலெல்லாம் மும்பை செயற்றீயினை ஒரு பாடல் பாட வைத்து விடவேண்டும் என்று கொள்கை வைத்திருப்பவர் குறித்த இசையமைப்பாளர். மற்ற பாடகர்களின் தேதிகளுக்காக காத்திருக்கும் இவருக்கு பாடும் நிலாவின் தேதி கிடைக்கவில்லையா என்ன?


செவ்வாய், 21 ஏப்ரல், 2009

யுவராஜ் - வடமொழிப் படத்திறனாய்வு

படத்தில் மூன்று கதையுடைத்தலைவர்கள். ஒன்று இசையமைப்பாளர் இரஃமான்; இரண்டு கலை இயக்குனர்; மூன்று ஒளிப்பதிவாளர். இவர்கள்தாம் படத்தினைத் தூக்கி நிறுத்துகின்றார்கள். கதை என்ன? அதுபற்றிக் கேட்கக்கூடாது. திரைக்கதை? கதை பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம் ஆனால், இதைப்பற்றிக் கேட்கவே கூடாது.

காதல், உரிமைநிலம் பணம் விரிசல்கள், இசைப்பயணம் என முப்புரவிகளில் படம் பயணிக்கிறது. முதலிரு புரவிகளுக்கு கால்கள் கிடையாது. மூன்றாவது புரவியினை மட்டும் நம்பிப் படம் எடுத்ததால், படம் சில நாட்களுக்குள்ளேயே பெட்டிக்குள் புகுந்துவிட்டது.

தனது இசைப்பேரரசினை இப்படத்திலும் திறம்பட நிறுவியிருக்கிறார் இரஃமான். காதல் பாடல்கள்1 தேன். பிறபாடல்கள்2 வெயிலுக்கு இதமான மோர்.

அனில்கப்பூர் இசைக்கிறுக்கனாக வருகிறார். கொடுத்த பணத்திற்கு மேல் நடித்திருக்கிறார்3. படத்தில் அதிகமாக வரும் சல்மான், காத்ரீனா போன்றவர்கள் நல்ல நடிப்புப்பள்ளியில் நடிப்பு கற்றுக்கொண்டால் நல்லது. குறிப்பாக சல்மானின் நடிப்பு ஒத்திகை4 பார்ப்பது போன்றே இருக்கின்றது. பாடல்களுக்கும் நல்ல முறையில் வாயசைக்கவில்லை. குறிப்பாக உச்சக்காட்சியில் வரும் பாடல்.

படத்தில் வரும் இடங்கள், ஒளிப்பதிவு, இசை அனைத்துமே புதுமை. ஆனால் படம் எடுத்த விதம், நடிகர்கள் நடிப்பு எல்லாமே பழமை. பாடல்களை மட்டும் காணொளியாக5 குறுவட்டு வாங்கியோ, இணையிறக்கம் செய்தோ காணலாம். தயவுசெய்து படம் பார்த்துவிடாதீர்கள்.

1 Aja meri, Muskura

2 Mustam, Shano

3 Overacting

4 Rehaushal

5 Video DVD

திங்கள், 6 ஏப்ரல், 2009

பசங்க திரைப்பாடல் திறனாய்வு


நான்கு முத்தான பாடல்களைத் தந்திருக்கும் புத்திசைய‌மைப்பாளருக்கு1 இது இரண்டாவது படம். இரண்டு கரைநாட்டு2 இசை. இரண்டு மேற்கத்திய இசை. "அன்பாலே அழகாகும் வீடு...” வார்த்தைகள் புரியும் இசைஞானி காலத்து திரைக்கரைநாட்டு இசை. "சின்னக்கண்ணன் அழைக்கிறான்..." க்குப்பிறகு குறித்த‌ ஆண்பாடகர்3 பாடியிருக்கும் திரையிசைப்பாடல். அழகான இப்பாடல் பாடியவர்களும்4 பொருளுணர்ந்து பாடியிருப்பது சிறப்பு. இது எனது இரண்டாவது "கண்கள் இரண்டால்..." என இசையமைப்பாளர் கூறியிருப்பது மேலும் சிறப்பு.

"ஒரு வெட்கம் வருதே..." தமிழ் தெரியாத பெண்5 குரலின் மெருகோடு காதை வருடும் மயிலிறகாக‌ வருகின்றது. மென்பொருளையே உருட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு தென்றல் வீசுஞ்சோலையில் உலாவுவதுபோல் உணர்வு தரும் அருமையான மெல்லிசை. பாடலில் ஆண்பாடகர்6 குரலை சற்றே கீழ்நிலையில் சரி செய்து கொள்ள வேண்டும். மேல்நிலை7களிலேயே பாடிப்பாடி கீழ்நிலையில்8 சில வார்த்தைகள் உள்ளே சென்றுவிட்டது.

"நாந்தான் கொப்பன்டா...9" வார்த்தைகள் அதிகம் சிதையாமல் வந்திருக்கும் மேல்நாட்டு இசை. மெச்சலாம். "கல்லும் முள்ளும்...10" பாடலும் மேல்நாட்டு இசையே. மேல்நிலைகள் அதிகம் இருக்கும் இப்பாடலை முணுமுணுக்க இயலாது.

கணினி இசைக்காலத்தில் கரைநாட்டு இசையினை மறக்காமல் அதற்கே உரிய நேர்த்தியோடு இரண்டாவது படத்திலும் மற்றொரு முறை தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர்.
இழுவை இசைக்கருவிகளும்11 சரி, வறட்டு விரல் இழுவை இசைக்கருவிகளும்12 சரி அருமையாக ஒலிப்பது பாடல்களில் அழகினை மேலும் கூட்டுகிறது. பாடல்கள் வெற்றியடைய வாழ்த்துவோம்.

இப்படத்திற்கு இசையமைத்தவர் நாற்பத்தொன்று ஆண்டு இளைஞர் ஆவார்.சிலகாலம் தொலைக்காட்சியில் அறிவிப்பாளராகவும், கொடைக்கானலில் இசை ஆசிரியராகவும் பணியாற்ற இவர் திருச்சியில் படித்தவர்.பாடல்களை http://www.tamilbeat.com/ தளத்திலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
------------
1ஜேம்ஸ் வசந்தன்
2கடற்கரையோர ஊர்களான தஞ்சாவூர்,திருவையாறு,கும்பகோணம் ஊர்களில் பிறந்ததால் கரைநாட்டு இசை என அழைக்கப்படுகிறது. Carnatic or classical music
3பாலமுரளிக்கிருஷ்ணா
4பாலமுரளிக்கிருஷ்ணா, குழந்தை சிவாங்கி குழுவினர்
5ஷ்ரேயா கோஷல்
6நரேஷ் ஐயர்
7High Pitch
8Low Pitch
9Singers: Larson Cyril, Satyanarayana
10Singer: Benny Dayal
11Violin
12Base Guitar