"கல்லுளி மங்கனுக்கு காடு மேடெல்லாம் தவிடுபொடி."
கல்லுளி மங்கன் போல் நம் மேல் விழும் அடிகளையெல்லாம் தாங்கிக் கொண்டால் என்ன இடர்பாடுகள் வந்தாலும் தவிடுபொடியாகும். என் தந்தை எப்போதோ சொல்லியது.
புதன், 19 நவம்பர், 2025
இடர்பாடுகளின் தீர்வு
முழங்கியவர்: PNA Prasanna மணி: புதன், நவம்பர் 19, 2025 0 கருத்துரை
முழக்கங்கள்: தோன்றியது
வியாழன், 23 செப்டம்பர், 2010
வேந்தனும், வீரையும்
"எங்களுக்குத் தெரியும்டா" நூலினை ஏழாவது முறையாகப் படித்துக் கொண்டிருந்தான் வேந்தன்.
நூலினைப் படிக்கும் பொழுதே நூலினூள் நுழைந்துவிடும் நடை அந்நூலினுடையது.
எண்ணியல் மயமாக்கப்பட்ட வேந்தனின் இல்லம் பெரும்பாலும் அயல்நாட்டு கண்ணாடிகளாலும்,
அலங்காரச் சிலைகளாலும் வேயப்பட்டிருந்தது. அத்தனையும் மறந்து நூலினுள் மூழ்கலானான் வேந்தன்.
நூலின் வனப்பு அதன் ஆசிரியரின் பெயரைக்கூட பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தை மறக்கடிக்கச் செய்தது.
அவள் அழகிமட்டுமல்ல, வீரமிக்க பெண்ணுங்கூட. தனியாகச் செயல்களைச் செய்வதில் வல்லவள்.பெயர் வீரை.
இனி இவளைப்பற்றிச் சில வரிகள் பார்ப்போம்.
புதினம் எழுதும் புதுமை விழிகள்
வில்லொத்த புருவம்.
தொழில் திருட்டு.
நுனி போல் குத்தும் நாசி.
ஆரஞ்சுப்பழ சுளை உதடுகள்.
இன்னும் எழுத முடியாத அழகு மிகுதியாக இருந்தது வீரையிடம்.
நூலிலிருந்து வெளியேறிய வேந்தன் தண்ணீர் குடிக்கச் சென்றான்.
குளிர்பதனப் பெட்டியிலிருந்து ஒரு குவளை நீருடன் வந்தவன் மீண்டும் நுழைந்தான் நூலினுள்.
வீடு முழுதும் எண்ணியல் மயமாக்கப் பட்டிருந்தாலும் பழைய நூலினைப் படிப்பது வியப்பே.
ஒவ்வொரு வார்த்தைகளும் சேர்ந்திருந்த விதம் மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றியது வேந்தனுக்கு.
கதையில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் அவன் அருகில் இருப்பது போல் எண்ணிக்கொண்டே நூலினுள் மூழ்கலானான்.
வீரை உடும்பு கொண்டு வந்திருந்தாள். எண்ணியல் அறையைத் திருடுவதற்காக.
உடும்புப் பிடி பிடிக்க தூக்கி கட்டிடத்தின் மேற்கூரையில் எறிந்தாள் வீரை.
எதோ அரவம் கேட்டவன் போல் எழுந்த வேந்தன் சுற்றும் முற்றும் பார்த்தான்.
ஒன்றுமில்லை என்ற உடன் மீண்டும் நூலினுள் நுழைந்தான்.
வீரை கட்டிய கயிறு அவ்வளவு தடிமனாக இல்லை. ஆதலால் வீரையின் கயிறு அறுந்தது பாதி தொலைவு வந்தவுடன்.
கதை முடிந்திருந்தது.
நூலின் மேல் உள்ள காதலால் "எங்களுக்குத் தெரியும்டா" நூலினை எட்டாவது முறையாகப் படிக்கத் தொடங்கினான் வேந்தன்.
நூலினைப் படிக்கும் பொழுதே நூலினூள் நுழைந்துவிடும் நடை அந்நூலினுடையது.
எண்ணியல் மயமாக்கப்பட்ட வேந்தனின் இல்லம் பெரும்பாலும் அயல்நாட்டு கண்ணாடிகளாலும்,
அலங்காரச் சிலைகளாலும் வேயப்பட்டிருந்தது. அத்தனையும் மறந்து நூலினுள் மூழ்கலானான் வேந்தன்.
நூலின் வனப்பு அதன் ஆசிரியரின் பெயரைக்கூட பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தை மறக்கடிக்கச் செய்தது.
அவள் அழகிமட்டுமல்ல, வீரமிக்க பெண்ணுங்கூட. தனியாகச் செயல்களைச் செய்வதில் வல்லவள்.பெயர் வீரை.
இனி இவளைப்பற்றிச் சில வரிகள் பார்ப்போம்.
புதினம் எழுதும் புதுமை விழிகள்
வில்லொத்த புருவம்.
தொழில் திருட்டு.
நுனி போல் குத்தும் நாசி.
ஆரஞ்சுப்பழ சுளை உதடுகள்.
இன்னும் எழுத முடியாத அழகு மிகுதியாக இருந்தது வீரையிடம்.
நூலிலிருந்து வெளியேறிய வேந்தன் தண்ணீர் குடிக்கச் சென்றான்.
குளிர்பதனப் பெட்டியிலிருந்து ஒரு குவளை நீருடன் வந்தவன் மீண்டும் நுழைந்தான் நூலினுள்.
வீடு முழுதும் எண்ணியல் மயமாக்கப் பட்டிருந்தாலும் பழைய நூலினைப் படிப்பது வியப்பே.
ஒவ்வொரு வார்த்தைகளும் சேர்ந்திருந்த விதம் மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றியது வேந்தனுக்கு.
கதையில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் அவன் அருகில் இருப்பது போல் எண்ணிக்கொண்டே நூலினுள் மூழ்கலானான்.
வீரை உடும்பு கொண்டு வந்திருந்தாள். எண்ணியல் அறையைத் திருடுவதற்காக.
உடும்புப் பிடி பிடிக்க தூக்கி கட்டிடத்தின் மேற்கூரையில் எறிந்தாள் வீரை.
எதோ அரவம் கேட்டவன் போல் எழுந்த வேந்தன் சுற்றும் முற்றும் பார்த்தான்.
ஒன்றுமில்லை என்ற உடன் மீண்டும் நூலினுள் நுழைந்தான்.
வீரை கட்டிய கயிறு அவ்வளவு தடிமனாக இல்லை. ஆதலால் வீரையின் கயிறு அறுந்தது பாதி தொலைவு வந்தவுடன்.
கதை முடிந்திருந்தது.
நூலின் மேல் உள்ள காதலால் "எங்களுக்குத் தெரியும்டா" நூலினை எட்டாவது முறையாகப் படிக்கத் தொடங்கினான் வேந்தன்.
முழங்கியவர்: PNA Prasanna மணி: வியாழன், செப்டம்பர் 23, 2010 0 கருத்துரை
முழக்கங்கள்: தோன்றியது
சனி, 13 மார்ச், 2010
எழுதிச் செல்லும் விதியின் கை எழுதியெழுதி மேற்செல்லும்.
நேர்மைப் புரட்சி ஏற்படுங்கால், அச்சுறுத்தும் தன்மை நீங்கி விடும். அரசாட்சி ஏற்படும். அங்கே எல்லோரும் அரசர்கள்தாம். முதல்வரும் பேருந்தில் பயணம் செய்வார் மக்களோடு மக்களாக. தமிழ் பேசுவார். நடுவண் அமைச்சரும் தூய தமிழ் கற்றுக் கொண்டு பேசுவார் எப்பொழுதுமே. நேர்மைப் புரட்சி ஏற்படின் பிணமும் தமிழ் பேசும். அச்சுறுத்தல் தன்மை வேரறும். எழுதிச் செல்லும் விதியின் கை எழுதியெழுதி மேற்செல்லும். கை யாருடையது. கை கடவுளுடையது.
முழங்கியவர்: PNA Prasanna மணி: சனி, மார்ச் 13, 2010 1 கருத்துரை
முழக்கங்கள்: தோன்றியது
Subscribe to:
இடுகைகள் (Atom)