சனி, 31 டிசம்பர், 2011

என்னைக் கவர்ந்த பாடல்


படம்: சிகரம்
பாடல்: வைரமுத்து
இசைய‌மைத்துப் பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
நடிப்பு: இராதா, எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

பல்லவி

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னைத் தொட ஏணி இல்லை - வண்ணம்.

சரணம் 1

பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
சுவாசிக்க ஆசையில்லை - 2
கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளித்தள்ளி நீயிருந்தால்
சொல்லிக் கொள்ள வாழ்க்கையில்லை. - வண்ணம்

சரணம் 2

நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி- 2
கன்னி உன்னைப் பாத்திருப்பேன்
கால் கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும்வரை
மேகம் போல் நான் மிதப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன். - வண்ணம்

சனி, 15 அக்டோபர், 2011

கொடுக்கப்பட்டதை விட அதிக விலையா? எந்த எண்ணுக்கு அழைப்பது?


இன்றைய நாட்களில் எது வாங்கினாலும், 5 முதல் 10 உரூபாய் முடிய அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக அழைக்க வேண்டிய தொலைபேசி எண்க‌ள்: 044‍ 24321438, 044 24321525

இந்த எண்க‌ள் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் உள்ள சட்டமுறை எடையளவுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்குச் செல்லும். இது குறித்து அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆவன செய்வார். 

அப்படி அதிகமான விலைக்கு விற்றால் குறைந்தபட்சம் 2 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 25 ஆயிரம் முடிய தண்டத்தொகை விதிக்கப்படும். கடந்த சில நாட்களில் தென்சென்னையில் 63 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நன்றி: தினகரன்

சனி, 1 அக்டோபர், 2011

என்னைக் கவர்ந்த பாடல்



பாடல்: இஞ்சி இடுப்பழகி...
பாடியவர்கள்: கமல்ஹாசன், எஸ்.ஜானகி
படம்: தேவர்மகன்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
குறிப்பு: எஸ்.ஜானகிக்கு நாட்டின் மிக உயரிய விருது கிடைத்த பாடல்

பல்லவி:

இஞ்சி இடுப்பழகி
மஞ்ச செவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம்
மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட
மானே வா (இஞ்சி...)

சரணம் 1

தன்னந்தனிச்சிருக்க‌
தத்தளிச்சுத் தானிருக்க‌
ஒன் நெனப்பில் நான் பறிச்சேன் தாமரைய‌
புன்ன வனத்தினிலே
பேடக்குயில் கூவயில‌
ஒன்னுடைய வேதனைய நானறிஞ்சேன்.
ஒங்கழுத்தில் மாலயிட
ஒன்னிரண்டு தோளத் தொட‌
என்ன தவம் செய்தேனோ என் மாமா
வண்ணக்கிளி கையத் தொட‌
சின்னச்சின்ன கோலமிட‌
உள்ள மட்டும் ஒன்வழியே மானே - 2

பல்லவி (பெண்குரல்):

இஞ்சி இடுப்பழகா
மஞ்ச செவப்பழகா
கள்ளச் சிரிப்பழகா
மறக்க மனம் கூடுதில்லையே
அடிக்கிற காத்தக் கேளு
அசயிற நாத்தக் கேளு
நடக்கிற ஆத்தக் கேளுக‌
நீ தானே

திங்கள், 12 செப்டம்பர், 2011

தமிழில் புதிய வார்த்தை சித்தாமாமா.


ஒராண்டு பதினொரு மாதங்கள் ஆன என் ஆண் மகவு, "பொற்கோ" சில நாட்களாகப் பேசி வருகிறான். "அம்மா, அப்பா, தண்ணி, மாமா, தாத்தா, சித்தி" எனச் சரியாகப் பேசி வருபவனுக்கு "சித்தப்பா" என்ற வார்த்தை சரியாக வரவில்லை. அதற்கு மாற்றாக‌ "சித்தாமாமா" எனக்கூறிவருகிறான். அவன் அவ்வார்த்தையைக் கூறும் பொழுது நாங்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

"குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்."

என்ற திருக்குறளுக்கொப்ப அவன் பேசுவதை நாங்கள் நாள்தோறும் சுவைத்து வருகிறோம்.