வியாழன், 28 ஜூலை, 2011

முடிந்தால் உதவுவோம்.


என்னுள் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய பதிவு இது.
தொடுப்பை இணைத்துள்ளேன்.

http://bluehillstree.blogspot.com/2011/07/blog-post_25.html

முடிந்தால் உதவுவோம்.

வெள்ளி, 1 ஜூலை, 2011

25 பைசா நாணயத்திற்கு மூடு விழா

புதுடில்லி: இன்று முதல் 25 பைசா நாணயத்திற்கு மூடு விழா நடத்தவுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. ஒரு காலத்தில் ஒரு பைசா, 2 பைசா, 5 பைசா, 10 பைசா என்று நாணயங்கள் இருந்தன. அவற்றை பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தி விட்டனர். இவற்றை இப்போதெல்லாம் காணவே முடிவதில்லை. தற்போது 25 பைசா, 50 பைசா ஆகியவை மட்டும் புழக்கத்தில் உள்ளன. இதில் 25 பைசா நாணயத்தையும் புழக்கத்திலிருந்து நிறுத்த அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி இன்றுடன் (ஜூன் 30ம்) தேதியுடன் 25 பைசா நாணயத்தை நிறுத்தவுள்ளனர். அதற்குப் பிறகு இந்த பைசா செல்லாததாக அறிவிக்கப்படும். அதன் பிறகு இதை எங்கும் பயன்படுத்த முடியாது. எனவே அதற்குள் 25 பைசாக்களை வைத்துள்ளவர்கள் அவற்றை வங்கிகளில் மொத்தமாக கொடுத்தால் அதற்கு நிகரான தொகையை வங்கிகள் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்

திங்கள், 20 ஜூன், 2011

அரிசியின் வேறு பெயர்கள்:


உலகத்தின் பொதுவான அணிகளில் ஒன்றாக அரிசி இருந்தாலும் அதன் தாய்வீடு தமிழகம்தான். அதன் வெவ்வேறு பெயர்கள் வெவ்வேறு மொழிகளில் பின்வருமாறு:

ஒரைஸா (இலத்தீன்)
அரூஜ் (அரபி)
அரோஜ் (ஸ்பானிஷ்)
ஒரிஜா (கிரேக்கம்)
ரயிஸொ (இத்தாலி)
ரிஜ் (பிரெஞ்சு)
ரியிஸ் (ஜெர்மன்)
ரிஸ் (ரஷ்யா)
வ்ரிஹி (சமற்கிருதம்)
வாரி (மடகஸ்கர்)
ப்ரின்ஜ் (பார்சி)
அக்கி (கன்னடம்)
சாவல் (இந்தி)

நன்றி தினகரன்.வசந்தம்

காற்றில் ஓடும் ஊர்தி கண்டுபிடிப்பு


பொள்ளாச்சி. ஏப்ரல் 17. பெட்ரோல் விலை உயர்வு, ஊர்தி விலை அதிகம், சுற்றுச்சூழல் மாசுபடுதல் உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு கோவை கருமத்தப்பட்டி தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர்கள் தீர்வு கண்டுள்ளனர். இன்று உலகம் முழுவதிலும் மக்களைப் பெரிதும் தாக்கி வருவது சூழல் மாசுபாடுதான். மாசுபாட்டைக் குறைக்க பல்வேறு நாடுகளும் பல பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

3 மாதம் இடைவிடாத முயற்சியின் காரணமாக 35000உரூபாய் செலவில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் ஊர்தியை அமைத்தோம். மணிக்கு 35 கி.மி செல்லும் இதற்கு ஆண்டுக்கு பராமரிப்புச் செலவு 2000உரூபாய் மட்டுமே. இதிலிருந்து புகையும் வராது. சூழலும் மாசுபடாது. நாம் செல்லும் வழியில் எங்காவது ஒரு மிதிவண்டிக் கடையில் நிறுத்தி ஊர்தியின் பின்புறத்தில் இருக்கும் பெட்டியில் காற்றை நிரப்பிக் கொண்டு பயணத்தைத் தொடரலாம். இவ்வாறு மதன்குமார்(21) கூறினார்.

நன்றி தினகரன்.