செவ்வாய், 26 அக்டோபர், 2010

இதுவல்லவோ கவிதை.

படையே நடுங்கும்
பாம்புக்குப் பெயர்
நல்ல பாம்பு.

பேய்ப் படத்திற்குப்
பெயர்
"யாவரும் நலம்."

கறு கறு என இருக்கும்
ஆட்டிற்குப் பெயர்
வெள்ளாடு.

மரத்திலிருந்து
கொய்த பழத்திற்குப் பெயர்
கொய்யாப் பழம்.

முதலிரு வரிகளில் முரண்பாடு
மூன்றாம் வரியில் முத்தாய்ப்பு
இதுவல்லவோ கவிதை.