செவ்வாய், 17 செப்டம்பர், 2013

மாதா உன் கோவிலில் - என்னைக் கவர்ந்த பாடல்


இசை: இளையராஜா
குரல்: ஜானகி
திரைப்படம்: அச்சாணி (1978)

மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் (2 )
தாயென்று உன்னைத்தான் (2 )
பிள்ளைக்கு காட்டினேன் மாதா 
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே (2 )
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே 
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா - மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே (2 )
தரைகண்டிடாத ஓடம் தண்ணீரிலே 
அருள்தரும் திருச்சபை மணிஓசை கேட்குமோ - மாதா 
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

பிள்ளைப பெறாத பெண்மை தாயானது (2 )
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது 
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா 
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான் (2 )
பிள்ளைக்கு காட்டினேன் மாதா 
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
ம்ம்...ம்ம்..ம்ம்ம்........

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

சாலமன் பாப்பையா - லியோனி ஓர் ஒப்பீடு

சாலமன் பாப்பையா - லியோனி

இது மதுரை - அது திண்டுக்கல்

இது சன் தொலைக்காட்சி - அது கலைஞர் தொலைக்காட்சி

இது கலை - அது அரசியல்

இது பட்டிமன்றம் - அது பாட்டுமன்றம்

இது அலசல், ஆராய்தல் - அது கிண்டல், நக்கல்

மொத்ததில் இது தமிழ் - அது தமிள்

நல்(ள்ளி)லிரவு

நள்ளிரவுத் தூக்கம்
நன்கு தொலைந்தவுடன்
படிக்கத் தொடங்கினேன்
பழைய பனுவலை.

பனுவல் படித்தால்
படுத்தவுடன் வருமாம்
தூக்கம்.

சொன்னதும் ஒரு பனுவல்தான்
இணையமல்ல.

தூக்கம் வந்ததோ இல்லையோ
வந்தது முத்தாய்ப்பற்ற
இந்த ஆக்கம்.