திங்கள், 18 நவம்பர், 2019

எத்தனை வகையான பேச்சு!

பேசு( speak)
பகர்( speak with data)
செப்பு(speak with answer)
கூறு ( speak categorically)
உரை ( speak meaningfully)
நவில்( speak rhymingly)
இயம்பு( speak musically)
பறை ( speak to reveal)
சாற்று ( speak to declare)
நுவல் (speak with introduction)
ஓது ( speak to recite)
கழறு( speak with censure)
கரை( speak with calling)
விளம்பு( speak with a message)
தொல்காப்பியர் இத்தனை வகையான பேச்சுகளைக் குறிப்பிடுகிறார்.
*எத்தனை மொழிகளில் இந்த சொல்லாக்கம் உண்டு!*
எண்ணிப் பாருங்கள் தமிழின் வலிமையை!

பழந்தமிழ்.. - புலனச்செய்தி

பழந்தமிழ்..
😊😊😊😊😊
தினமும் கூறப்படும் இரட்டை சொற்களும் அவற்றின் பொருட்களும்:-*
😌🌹😌🌹😌🌹😌🌹

*குண்டக்க மண்டக்க.*

குண்டக்க-இடுப்புப்பகுதி.

மண்டக்க-தலைப்பகுதி.

சிறுவர்கள் கால்பக்கம்,தலைப்பக்கம்
பார்க்காமல் தூங்குவார்கள்.
அதுபோல் வீட்டில் பொருள்கள் சிதறி,
மாறி இருத்தலே
குண்டக்க மண்டக்க என்று பொருள்

*அக்குவேர் ஆணிவேர்*

அக்குவேர்_செடியின் கீழ் உள்ள
மெல்லியவேர்.

ஆணிவேர்_செடியின் கீழ் ஆழமாக
செல்லும் உறுதியான வேர்.

*அரை குறை*

அரை-ஒரு பொருளில் சரிபாதி அளவு.

குறை-அந்த சரிபாதியளவில்
குறைவாக உள்ளது குறை.
(உ-ம்.)அரை குறை வேலை.

*அக்கம்பக்கம்.*

அக்கம்-தன்வீடும்,தான்இருக்கும் இடமும்.

பக்கம்-பக்கத்துவீடும் பக்கத்தில் உள்ள இடமும்.
*கார சாரம்*

காரம்-உறைப்புச்சுவை.

சாரம்-சார்ந்தது.(காரம்
சார்ந்த பிற சுவைகள்)

*இசகு பிசகு.*

இசகு-தம் இயல்பு
தெரிந்து,ஏமாற்றுபவனிடம்
ஏமாறுதல்.

பிசகு-தம்முடைய
அறியாமையால் ஏமாறுதல்.
(உ-ம் )இசகு பிசகாக மாட்டிக்கொண்டார்.

*இடக்கு முடக்கு*

இடக்கு--எள்ளி நகைத்தும்,
இகழ்ந்தும் பேசுதல்.

முடக்கு--கடுமையாக எதிர்த்தும்,
தடுத்தும் பேசுதல்.

*ஆட்ட பாட்டம்*

ஆட்டம்--தாளத்திற்குப் பொருந்தியோ/பொருந்தாமலோ ஆடுவது.

பாட்டம்--ஆட்டத்திற்குப்
பொருந்தியோ/பொருந்தாமலோ
பாடுவது..

*தோட்டம் துரவு*

தோட்டம் -செடி,கொடி கீரை பயிரிடப்படும் இடம்.தோப்பு-மரங்களின் தொகுப்பு.

துரவு--கிணறு.

*பழக்க வழக்கம்.*

பழக்கம்--ஒருவர் ஒரு
செயலைப் பலகாலம்
செய்து வருவது.

வழக்கம்--பலர் ஒரு செயலைப்
பலகாலம் கடைபிடித்து வருவது.(மரபு)

*சத்திரம் சாவடி.*

சத்திரம்--இலவசமாக சோறு போடும் இடம்(விடுதி).

சாவடி--இலவசமாக தங்கும் இடம்(விடுதி

*பற்று பாசம்.*

பற்று--நெருக்கமாக உறவாடி இருத்தல்.

பாசம்--பிரிவில்லாமல்
சேர்ந்தே இருத்தல்.

*ஏட்டிக்குப் போட்டி.*

ஏட்டி-விரும்பும் பொருள் அல்லது செயல்.
(ஏடம்--விருப்பம்.)

போட்டி--விரும்பும் பொருள் அல்லது
செயலுக்கு எதிராக வரும் ஒன்று.

*கிண்டலும் கேலியும்.*

கிண்டல்--ஒருவன் மறைத்தச் செய்தியை அவன் வாயில் இருந்தே
பிடுங்குதல்.(கிண்டி தெரிந்து கொள்ளுதல்).

கேலி--எள்ளி நகையாடுதல்.

*ஒட்டு உறவு.*

ஒட்டு--இரத்தச்சம்பந்தம் உடையவர்கள்.(தாய்,தந்தை,
உடன்பிறந்தவர்கள்,மக்கள்)

உறவு--பெண் கொடுத்த அல்லது
பெண் எடுத்த வகையில் நெருக்கமானவர்கள்.
*பட்டி தொட்டி.*
பட்டி---மிகுதியாக
ஆடுகள் வளர்க்கப்படும் இடம்(ஊர்).

தொட்டி---மாடுகள் மிகுதியாக வளர்க்கப்படும் இடம்(ஊர்).

*கடை கண்ணி.*

கடை---தனித்தனியாக அமைந்த வியாபார(வணிக)நிலையம்.

கண்ணி-----தொடர்ச்சியாக கடைகள் அமைந்த
கடைவீதி.
*பேரும் புகழும்.*
பேர்--வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பும் பெருமையும்.

புகழ்--வாழ்விற்குப் பிறகும்
நிலைப்பெற்றிருக்கும் பெருமை.

*நேரம் காலம்.*

நேரம்--ஒரு செயலைச்
செய்வதற்கு நமக்கு வசதியாக
(Time) அமைந்த பொழுது.

காலம்--ஒரு செயலைச்
செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில்
எடுத்துக்கொள்ளும் கால அளவு நிலை.

*பழி பாவம்.*

பழி---நமக்கு தேவையில்லாத,
பொருந்தாத செயலைச்
செய்ததால்,இப்பிறப்பில்
உண்டாகும் பழிப்பு.

பாவம்---தீயசெயல்களைச்
செய்ததால் மறுபிறப்பில்
நாம் அனுபவிக்கும் தீய நிகழ்வுகள்.

*கூச்சலும் குழப்பமும்.*

கூச்சல்--துன்பத்தில் சிக்கி உள்ளோர் போடும்
அவல ஒலி (ஓலம்).
கூ--கூவுதல்.
----
குழப்பம் --அவல ஒலியைக் கேட்டு அங்கு வந்தவர்கள் போடும் இரைச்சல்..

*நகை நட்டு.*

நகை--பெரிய அணிகலங்களைக்
குறிக்கும்.(அட்டியல்,ஒட்டியாணம்,சங்கிலி).
நட்டு---சிறிய அணிகலன்களைக்குறிக்கும்.
(திருகு உள்ள தோடு,காப்பு,கொப்பு).

*பிள்ளை குட்டி.*

பிள்ளை--(பொதுப்பெயர்)
இருப்பினும் ஆண் குழந்தையைக் குறிக்கும்.

குட்டி---இது பெண் குழந்தையைக்
குறிக்கும்.

*வாட்ட சாட்டம்.*
வாட்டம்-வளமான தோற்றம்,வாளிப்பான உடல் ,
அதற்கேற்ப உயரம்.

சாட்டம்--உடல்(சட்டகம்),வளமுள்ள கனம்.
தோற்றப் பொலிவு.
*காய்கறி.*

காய்---காய்களின் வகைகள்.

கறி--
(சைவ உணவில் )கறிக்கு உபயோகப்
படுத்தப்படும் கிழங்கு வகைகளும்,கீரை வகைகளும்.

*கால்வாய்-வாய்க்கால்*

வாய்--குளம்.

கால்வாய்--குளத்திற்கு
தண்ணீர் வரும் கால்.(பாதை).
வாய்க்கால்--குளத்திலிருந்து
தண்ணீர் செல்லும் கால்.(பாதை)
பாதை என்பது நீர்வழிப்பாதையைக்குறிக்கும்.

*ஈவு இரக்கம்.*

ஈவு--(ஈதல்).கொடை வழங்குதல்.

இரக்கம்---(அருள்).
பிற உயிர்களின்மேல்
அருள் புரிதல்.
*பொய்யும் புரட்டும்.*

பொய்---உண்மை இல்லாததைக்கூறுவது.

புரட்டு-- ஒன்றை நேருக்கு மாறாக
மாற்றி ,உண்மைபோல் நம்பும்படியாக கூறுவது.

*சூடு சொரணை.*

சூடு--ஒருவர் தகாத சொல்லைப்
பேசும்போது/தகாத செயலைச்செய்யும் போது நமக்கு ஏற்படும்
மனக்கொதிப்பு(மனவெதுப்பு,எரிச்சல்).

சொரணை--நமக்கு ஏற்படும் மான உணர்வு.
*பட்டம், விருது.*

பட்டம்-- கல்லூரி , பல்கலைக்கழகம் இவற்றல் படித்து பெறுவது.
பெயருக்கு ப்பின்னால்‌ இடம் பெறும்.

விருது--தகுதி அடிப்படையில் வழங்கப்படுவது.இது
பெயருக்கு முன்னால் ஸ்டார் இடம்பெறும்.☺☺☺👍👍👌👌
------------ -------------.
படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
அன்புடன்
❤🙏🏻