சனி, 15 அக்டோபர், 2011

கொடுக்கப்பட்டதை விட அதிக விலையா? எந்த எண்ணுக்கு அழைப்பது?


இன்றைய நாட்களில் எது வாங்கினாலும், 5 முதல் 10 உரூபாய் முடிய அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக அழைக்க வேண்டிய தொலைபேசி எண்க‌ள்: 044‍ 24321438, 044 24321525

இந்த எண்க‌ள் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் உள்ள சட்டமுறை எடையளவுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்குச் செல்லும். இது குறித்து அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆவன செய்வார். 

அப்படி அதிகமான விலைக்கு விற்றால் குறைந்தபட்சம் 2 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 25 ஆயிரம் முடிய தண்டத்தொகை விதிக்கப்படும். கடந்த சில நாட்களில் தென்சென்னையில் 63 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நன்றி: தினகரன்

சனி, 1 அக்டோபர், 2011

என்னைக் கவர்ந்த பாடல்



பாடல்: இஞ்சி இடுப்பழகி...
பாடியவர்கள்: கமல்ஹாசன், எஸ்.ஜானகி
படம்: தேவர்மகன்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
குறிப்பு: எஸ்.ஜானகிக்கு நாட்டின் மிக உயரிய விருது கிடைத்த பாடல்

பல்லவி:

இஞ்சி இடுப்பழகி
மஞ்ச செவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம்
மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட
மானே வா (இஞ்சி...)

சரணம் 1

தன்னந்தனிச்சிருக்க‌
தத்தளிச்சுத் தானிருக்க‌
ஒன் நெனப்பில் நான் பறிச்சேன் தாமரைய‌
புன்ன வனத்தினிலே
பேடக்குயில் கூவயில‌
ஒன்னுடைய வேதனைய நானறிஞ்சேன்.
ஒங்கழுத்தில் மாலயிட
ஒன்னிரண்டு தோளத் தொட‌
என்ன தவம் செய்தேனோ என் மாமா
வண்ணக்கிளி கையத் தொட‌
சின்னச்சின்ன கோலமிட‌
உள்ள மட்டும் ஒன்வழியே மானே - 2

பல்லவி (பெண்குரல்):

இஞ்சி இடுப்பழகா
மஞ்ச செவப்பழகா
கள்ளச் சிரிப்பழகா
மறக்க மனம் கூடுதில்லையே
அடிக்கிற காத்தக் கேளு
அசயிற நாத்தக் கேளு
நடக்கிற ஆத்தக் கேளுக‌
நீ தானே