புதன், 26 மே, 2010

திடீரென்று

திடீரென்று

என்டாப்பா..? படிச்சு முடிச்சாச்சு இனிமேல் என்ன பண்லாம்ன்னு இருக்க?
அப்பா வினவினார்.

"சிறுகதை எழுதலாம்ன்னு இருக்கேன். " இது மகன்.

"அதுக்குரிய இலக்கணம் தெரியுமாடா?" அப்பா கேட்டார்.
"திடீர்ன்னு தொடங்கி திடீர்ன்னு முடியணும். சுஜாதா சொல்லியிருக்காருப்பா."
"அப்படி என்னதான் எழுதியிருக்க பாக்கலாம்."
ஆர்வமாய்ப் பிடுங்கி இருந்த தாளில் ஒரே ஒரு வார்த்தை அமைந்திருந்தது.

திடீரென்று..

2020 ம்... அப்றம்

2020 ம்... அப்றம்

"அந்த பீட்டா பதிப்பை அப்பவே முடிச்சாசே.. இப்ப என்ன பண்றீங்க பொற்கோ?" இனியா கேட்டாள்.
"ஜீமெயிலே பீட்டாதான், அதை இன்னும் தோண்டியெடுத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்." இது பொற்கோ.

ம்ம்... சரி அரட்டை கச்சேரியே தொட்ங்கலாமே.

"நாம வாழறதே தமிழ்நாட்டுக்குத்தானே.." இது நீங்கள்.

"இல்லை இந்தியாவுக்குத்தான்." இது பொற்கோ.

"2020" பற்றியே பேசலாம்.இது நீங்கள்.

இரப்பர் மூலம் சாலைகள் அமைத்தல் வேண்டும்.
இது ஒரு சோதனை முயற்சிதான். சிறிதளவு மட்டும் செய்து விட்டு உந்துகளை ஓட்டிப்பார்க்க வேண்டும்.
விபத்துக்கள் நன்கு குறையும்.
பொற்கோ பேசும் அழகைக் கேட்டு இனியா வியப்பில் ஆழ்ந்தாள்.

மூலிகை எரிபொருள் கண்டறியப்பட வேண்டும்.
மூலிகை எரிபொருள் வந்தால் அண்டத்துக்கு எந்த தாக்கமும் இராது. ம். ..அப்றம் இது நீங்கள்.

லினக்ஸ் கோலோச்ச வேண்டும்.
சர்வரில் redhat இயங்குதளமும் கிளைண்டில் உபுண்டு இணையதளமும் இருக்க வேண்டும்.
ஏனெனில் வைரஸ் என்னும் பேச்சுக்கு லினக்ஸில் இடமே இல்லை.

மாறி வரும் பருவ நிலையினை கட்டுப்படுத்த வேண்டும்.
Global Warming சரி செய்யப்பட வேண்டும்.

இந்தியா இலங்கை பாலம் கட்ட வேண்டும்.
பாரதி பாடியபடி சிங்கள நாட்டிற்கோர் பாலம் அமைப்போம்.

காவிரியும் கங்கையும் இணைக்கப்பட வேண்டும்.
அதைச்சுற்றி தொடர்வண்டி, சாலைகள், பூங்காக்கள் அமைக்க வேண்டும்.
இராசஸ்தான் பாலைவனமே இருக்காது.
கங்கை நீர் இமையத்திலிருந்தே வருவதால் வற்றாத ஆறு காவிரி ஆகிவிடும்.
மக்கள் தொகை அதிகம் இருப்பது ஒரு வகையில் நல்லதுதான். நிறைய ஆற்றல் கிட்டும்.

அரட்டை முடிந்து பொற்கோ மீண்டும் பீட்டா பதிப்பினுள் நுழைந்தான் புன்முறுவலோடு.
உங்களுக்கு கையத்துவிட்டு இனியாவும் திட்ட அறிக்கை செயல்பாட்டில் இணைந்தாள்.

இதையெல்லாம் யார் செய்வது என்று எண்ணிக் கொண்டிருக்காமல் இருங்கள்..

பொற்கோ சொன்னகதையினை செயல்படுத்துபவர் நீங்களாகவும் இருக்கலாம்.

கற்க,கற்க

பாலிண்ரோம்  (திருப்பிப் போட்டாலும் அதே சொல், பொருள் வரும்.) என்ற வார்த்தை ஆங்கிலத்திலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இதற்கிணையாக தமிழிலும் வார்த்தைகள் உண்டு.

"விகடகவி"
,"தேரு வருதே".
"சிவா நீ வாசி."

போன்றவை எடுத்துக்காட்டுகளாகும்.
தமிழில் இவற்றைச் சரளமாக அமைக்க ஒற்றெழுத்துக்கள் தடையாக இருக்கின்றன.
தமிழில் ஒற்றெழுத்துடன் கூடிய ஒரே ஒரு பாலிண்ட்ரோம் "கற்க" மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் "காக்கா", "பாப்பா", "தாத்தா" போன்றவைகளும் பாலிண்ட்ரோம்கள்தாம் என்பதை பின்னாளில் அறிந்து கொண்டேன்.

சனி, 8 மே, 2010

தமிழுக்கும் அமுது என்று பேர்

தமிழ் தமிழ்
எனக்கூறின்
வரும் அமிழ்து.
எனவே தான் பாரதிதாசன் குறிப்பிட்டார் தமிழுக்கும் அமுது என்று பேர்.


தமிழ் தமிழ் என்று சொல்லுங்கள் அமிழ்து என்று ஒலிக்கும் தமிழ்.

தமிழ் இனி மெல்ல வாழும்.

இயற்றமிழ்,
இசைத்தமிழ்,
நாடகத் தமிழ்,
அறிவியல் தமிழ்

என தமிழை நான்கு வகைப் படுத்திப் பார்ப்பின்


வெல்லத் தமிழ் இனி மெல்ல வாழும்.
வகைப்படுத்துங்கள்.
தமிழை வாழ வையுங்கள்.

பச்சை

இக்கரைக்கு அக்கரைப் பச்சை. அக்கறை இருந்தால் எங்கும் பச்சை. அக்கறை உண்டு. இப்போதும் எங்கும் பச்சை.