திங்கள், 6 அக்டோபர், 2014

தக்காளி - எம்பேரு கோயில் மணி

கவுண்டமணி செந்திலை திரையில் சேர்ந்து பார்த்து கொள்ள நாளாச்சு. இருவரும் சேர்ந்து பேசினால் எப்டியிருக்கும் என்று ஒரு சிறிய கற்பனை.
வாங்க பெல்லு
என்ன அண்ணே நீங்க எவ்ளோ பெரிய ஆளு, நீங்க போயி என்னய வாங்கன்னு கூப்டுக்கிட்டு.”
அது ஒனக்குத் தெரியுதாடா வண்டுருட்டாந் தலையா
அது ஊருக்கே தெரியுமே. ஆமாண்ணே நீங்க இப்ப எங்க ஆணி புடுங்கிட்டு இருக்கிங்க.”
நானாவது எங்கயாவது ஆணி புடுங்கிட்டு இருக்கேன். நீ புடுங்கறது எல்லாமே தேவயில்லாத ஆணிதானடா.”
அதுக்கில்லண்ண,..”
டேய் இந்த டக்கால்டி வேலயெல்லாம் வச்சுக்காத. சும்மா வெட்டி ஒட்டற வேலயில்ல இருக்க நீயே இப்டி பேசுனா, சொந்தமா வேல செய்யற நாங்க எப்டியிருப்போம். அதென்னமோ pdf எல்லாம் ஏத்துக்க மாட்டிங்களாமே, Document தான் வெட்டி ஒட்டறதுக்கு தோதுப்படுதோ.
அண்ணே எதப்பத்தி வேண்ணாலும் பேசுங்க. ஆனா வேலையப் பத்தி மட்டும் பேசாதீங்க.”
அடுத்தவன் கக்குறத நக்குறீங்க. காலக்கழுவிக் குடுத்தாக்கூட குடிப்பிங்க. பத்து பதினைஞ்சு வீடு பிச்சயடுத்து  (document வெட்டி ஒட்டி) திங்கற நாய்க்கு எகத்தாளத்தப் பாரு. லோலாய்த்தனத்தப் பாரு.”
டேய் பெல்லு கோவணம் இல்லனாலும், மீசைக்கு முறுக்கு கேக்குதாக்கும்.”
அண்ணே சொந்தப் பேர் சொல்லி கூட்டுங்க.”
பெல்லுன்னு சொன்னா நான் மட்டுந்தான் அடிப்பேன். தக்காளி, ஒன் சொந்தப்பேர் கோயில் மணின்னு சொன்னா, அவன் அவன் வந்து அடிப்பான். பத்தாதக்கு கோயில் மணிய யாரு ஆடிச்சா ஒனக்கென்னம்பான்.”
எல்லாம் சரிதான். தக்காளின்னா என்னண்ணே?”

ம். அத அடுத்த வாரம் சொல்றேன்.”