வியாழன், 24 மார்ச், 2011

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: வெளிச்சம்
இசை: மனோஜ் கியான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
 
பல்லவி

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன‌?
கன்னி உந்தன் பேர் என்ன‌?
வெள்ளிக் கொலுசு போகும் திசையில் பாவி  நெஞ்சு போவதென்ன?  -(துள்ளி)
 
சரணம் 1
 
பூமி என்னும் பொண்ணும் பொட்டு வைத்துக் கொண்டு பச்சை ஆடை கட்டிப் பார்த்தால், ஊமைப் பெண் நாணம் கொண்டு ஏன் மறைந்து போகிறாள்?-2
பூமிப்பெண்ணுக்கும் கன்னிப்பெண்ணைப் போல் நெஞ்சில் ஈரம் உண்டு. -
(துள்ளி)


சரணம் 2

அந்தி வெளிச்சம் முந்தி விரித்துப் பந்தி இங்கு வைக்கும் நேரம், பூச்சிந்தும் பூமியெல்லாம் நான் வணங்கும் காதலி - 2
மண்டியிட்டு நான் முத்தம் தரவா மின்னல் பெண்ணே வாவா. -(துள்ளி)

வெள்ளி, 11 மார்ச், 2011

பணம் படுத்தும் பாடு

செவிவழிக் கவிதை

நாயாய்ப் பணத்தைத் தேடினேன்.
பேயாய் அதனைப் பாதுகாத்தேன்.
நோயாய் அதனைச் செலவழித்தேன்.
மனிதனாய் வாழ மறந்துவிட்டேன்.