செவ்வாய், 3 டிசம்பர், 2013

நிலைமை

கற்ற தமிழ் மங்காதிருக்க‌
உளச்சோர்வும் ஒவ்வாமையும் ஒழிந்து போக‌
கண்ணெரிச்சல் காணாமல் போக‌
நிரல் குழப்பம் நீங்கிப்போக‌
பொங்குதமிழ் கொண்டு புனைந்தான் புதுக்கவிதை
இணையத்தில் காலங்கழிக்கும்
இக்கால மென்பொறிஞன்.
---
அருஞ்சொற்பொருளுக்கும் (Glossary) ஆங்கிலம் தேவைப்படுகிறது. தமிழ்த்தாய் மன்னிப்பாளாக.
---
உளச்சோர்வு - Depression
ஒவ்வாமை - Allergy
நிரல்         - Program
இணையம்         - Internet
மென்பொறிஞன் - Software Engineer

கவிதை சொல்லும் பெருநெறி::
தமிழ் கவிதைகள் படிப்பதால் தென்றல் வீசுஞ்சோலையில் வாசஞ்செய்வது போலிருக்கும். ஆதலால் உளச்சோர்வு, ஒவ்வாமை, பெருங்குழப்பம், கண்ணெரிச்சல் போன்றவைகள் நீங்கி புத்துணர்வு பெறுதல் திண்ணம்.

எங்கே மனதில் பயமின்றி... - இரவீந்தரநாத் தாகூர் கவிதை தமிழில்


Please install TSC_Avarangal font for viewing this post
±í§¸ Áɾ¢ø ÀÂÁ¢ýÈ¢ ¾¨Ä¾¡ý ¯Â÷óÐ ¿¢ü¸¢È§¾¡,
«ó¾ ;ó¾¢Ã Å¢ñ½¸ò¾¢ø ±ý ¾¡ö ±ý ¿¡Î ŢƢò¦¾Ø¸.

±í§¸ «È¢× ;ó¾¢Ãò¾¡ø ¯Ä¸¢ý ¯ÕÅõ º¢¨¾Â¡§¾¡,
«ó¾ ;ó¾¢Ã Å¢ñ½¸ò¾¢ø ±ý ¾¡ö ±ý ¿¡Î ŢƢò¦¾Ø¸.

±í§¸ «È¢× ;ó¾¢Ãò¾¡ø ¯ñ¨Á Å¡÷ò¨¾¸û ¦ÅÇ¢ÅÕ§Á¡,
«ó¾ ;ó¾¢Ã Å¢ñ½¸ò¾¢ø ±ý ¾¡ö ±ý ¿¡Î ŢƢò¦¾Ø¸.

±í§¸ ¯¨ÆôÀ¢ý ¸É¢¸Ç¢É¡ø ´ýÈ¡öì ¨¸¸û þ¨½ó¾¢Î§Á¡,
«ó¾ ;ó¾¢Ã Å¢ñ½¸ò¾¢ø ±ý ¾¡ö ±ý ¿¡Î ŢƢò¦¾Ø¸.

±í§¸ ¦¾Ç¢Å¡É Å¡÷ò¨¾¸Ç¡ø §º¡õÀø ¦ºòÐ ´Æ¢¸¢È§¾¡,
«ó¾ ;ó¾¢Ã Å¢ñ½¸ò¾¢ø ±ý ¾¡ö ±ý ¿¡Î ŢƢò¦¾Ø¸.

±í§¸ ¦Àâ ¾ý¨Á¢ɡø ¯ûÇõ §¿÷ ÅÆ¢ ¿¼ì¸¢È§¾¡,
«ó¾ ;ó¾¢Ã Å¢ñ½¸ò¾¢ø ±ý ¾¡ö ±ý ¿¡Î ŢƢò¦¾Ø¸.

கவிச்சோலை

      ஒழிப்போம்  சிறார் தொழிலை
     இராமன் சென்றான்
     பதினான்கு ஆண்டுகள் கானகம்.
     பதினான்கு அகவை நிரம்பவில்லை - குழந்தைக்கு
     இப்பொழுதே கானகம்.
     அவனிக்கு வந்தது - பெரும்
     பணி செய்யவே
     உண்மைதான்.
     பள்ளிசெல்லும் வயதில்  - செய்யும்
     பணி பணியல்ல
     பெரும் பிணி.

     குடும்பத்தில் பெரியோர் சரிவர இருப்பின் - இல்லை
     குழந்தைத் தொழிலாளர்.
     குழந்தைத் தொழிலாளரை வேரறுப்போம்.
     குவலயம் காப்போம்.

     வருவாய் குறைந்தாலும் பரவாயில்லை - களைவோம்
     விரைவாய்ச்  சிறார் தொழில்.
     அவனி முழுக்க
     சிறார் தொழில் அழிக்க  - இன்றே
     சர்வாதிகாரியாவோம்..

      இனிப்பு
     கல்லூரித் தேர்வில் வெற்றி பெற்ற என் காதலி
     இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் அத்தான்
     என்று காட்டினாள் தன் இதழ்களை.
     தேடல்
     அமாவாசையன்று
     அம்புலியைத் தேடியது
     அளப்பரிய இயற்கை.
      தனிமை
     ஆளித்தனிமையில்
     இன்பத்தேன்.
     கவிதைகள்.
      மெய் தீண்டல்
     முகச்சமவெளியில் புற்கள்
     என்னவன் சவரம் செய்து ஒரு வாரமாகி விட்டது.
     முரண்பாடு
     நெருப்பின்றி
     புகைந்தது.
     மூடுபனி.

திங்கள், 28 அக்டோபர், 2013

எங்கோ எதிலோ படித்தது

எழுந்துவிட்ட அதிகாலை

எழுப்பிவிட்ட கடிகாரம்

காத்திருக்கும் கடமை

இன்னும் உறங்கும் நண்பன்

சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்

இயந்திரம் தந்த இதமான வெந்நீர்

விரும்பிய இசைபாடும் குறுவட்டு

சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்

இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை

எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்

இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு

இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்

நாளைய காலையின் விழிப்பிலாவது  
 
                 தாயின் , "மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாருஎனும் குரல் கேட்காதா 


என்ற எதிர்பார்ப்போடு..... 


இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்

மென்பொருள் வல்லுனன்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

மாதா உன் கோவிலில் - என்னைக் கவர்ந்த பாடல்


இசை: இளையராஜா
குரல்: ஜானகி
திரைப்படம்: அச்சாணி (1978)

மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் (2 )
தாயென்று உன்னைத்தான் (2 )
பிள்ளைக்கு காட்டினேன் மாதா 
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே (2 )
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே 
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா - மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே (2 )
தரைகண்டிடாத ஓடம் தண்ணீரிலே 
அருள்தரும் திருச்சபை மணிஓசை கேட்குமோ - மாதா 
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

பிள்ளைப பெறாத பெண்மை தாயானது (2 )
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது 
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா 
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான் (2 )
பிள்ளைக்கு காட்டினேன் மாதா 
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
ம்ம்...ம்ம்..ம்ம்ம்........

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

சாலமன் பாப்பையா - லியோனி ஓர் ஒப்பீடு

சாலமன் பாப்பையா - லியோனி

இது மதுரை - அது திண்டுக்கல்

இது சன் தொலைக்காட்சி - அது கலைஞர் தொலைக்காட்சி

இது கலை - அது அரசியல்

இது பட்டிமன்றம் - அது பாட்டுமன்றம்

இது அலசல், ஆராய்தல் - அது கிண்டல், நக்கல்

மொத்ததில் இது தமிழ் - அது தமிள்

நல்(ள்ளி)லிரவு

நள்ளிரவுத் தூக்கம்
நன்கு தொலைந்தவுடன்
படிக்கத் தொடங்கினேன்
பழைய பனுவலை.

பனுவல் படித்தால்
படுத்தவுடன் வருமாம்
தூக்கம்.

சொன்னதும் ஒரு பனுவல்தான்
இணையமல்ல.

தூக்கம் வந்ததோ இல்லையோ
வந்தது முத்தாய்ப்பற்ற
இந்த ஆக்கம்.

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

பூசணிக்காய்க் கணக்கு - தமிழர் என்பதில் பெருமிதங்கொள்வோம்.

பண்டைய தமிழ்ப் புலவர்கள் பல்துறை அறிஞர்களாகவே இருந்துள்ளனர். கருவில் உருவாகும் குழந்தையின் வளர்ச்சியை அங்குலம் அங்குலமாக விவரித்துள்ளனர். வானில் செல்லும் விண்மீன்களின் பறத்தலை (சஞ்சாரத்தை) கவிதையில் சொல்லியுள்ளனர் என்று தமிழ்ப் புலவர்களின் பெருமையைக் கூறிக் கொண்டே போகலாம். அதில் மேலும் ஒரு மணிமகுடமாக கணக்கியலிலும் தமிழ்ப் புலவர்கள் அறிஞர்களாக இருந்துள்ளனர் என்று இப்போது தெரியவந்துள்ளது.

பூசணிக்காயில் உள்ள விதைகளின் எண்ணிக்கையை கூற முடியுமா என்று கேட்டால், தேவையில்லாத வெட்டி வேலை என்று சொல்வோம். ஆனால் அந்தப் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்று சொல்ல முடியும் என்றால் அதெப்படி என்று நம் புருவங்கள் உயர்வதைத் தவிர்க்க முடியாது.

அதைச் சொல்கிறது ஒரு செய்யுள். கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் ஒரு தமிழ்க் கணித நூல் எழுதியுள்ளார். அதன் பெயர் கணக்கதிகாரம்.

"கீற்றெண்ணி முத்தித்துக் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்திலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்" ‍ இது தான் அந்தக்கணக்கு.

ஒரு பூசணிக்காயின் கீற்றுக்களை எண்ணிக்கொண்டு அதை மூன்று ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையைப் பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கை என்பது இந்தப் பாடலின் பொருள்.

சரி அதைக் கணக்கு மூலமே பார்ப்போம்.

ஒரு பூசணிக்காயில் உள்ள கீற்றுக்களின் எண்ணிக்கை 5 என வைத்துக்கொள்வோம். பாடலின் படி 3,6,5 ஆகியவற்றால் பெருக்கக் கிடைப்பது 450 ஆகும். அதைப்பாதியாக்கினால் 225 ஆகும். அதை மீண்டும் முன்றால் பெருக்கக் கிடைப்பது 675 ஆகும். இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லையாம். எங்கோ ஒரு மூலையில் கிடைத்த ஓலைச்சுவடியில் இந்தச் செய்யுள் கிடைத்துள்ளது. இதைப் போன்ற வேறு செய்யுள்கள் உள்ளனவா? என்று ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து தேடி வருகிறார்கள்

நன்றி: தினத்தந்தி திண்டுக்கல் பதிப்பு 28/01/2013

செவ்வாய், 22 ஜனவரி, 2013

எங்கேயோ எப்போதோ இணையிறக்கம் செய்த கவிதைகள்







வியாழன், 17 ஜனவரி, 2013

இனியவை இருபது - இசைப்புயலின் தாய் மண்ணே வணக்கம்

இசைப்புயலின் தாய் மண்ணே வணக்கம் சென்னை இசை நிகழ்ச்சி செயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. அதில் என்னைக் கவர்ந்த இருபது பாடல்களை இனியவை இருபது என தொகுத்தளித்திருக்கிறேன்.

14/01/2013 - பொங்கல் திருநாள்
1. தீ..தீ.. (திருடா திருடா) - நிதி மோகன், இரஞ்சித் பரோட்(விஐபி இசையமைப்பாளர்)
புதியதாய் இந்த இசைக்கருவியினை இசைக்கத் தொடங்கியுள்ளேன். தவறிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்றார் இசைப்புயல். பிறகு தடவித்தடவி ஏதோ ஒரு பெயர் தெரியாத இசைக்கருவியினை வாசித்தார்.

இதைத் தொடர்ந்து வந்த சித்ரா மெட்டுமாறா புதிய பதிப்பாக பின்வரும் பாடல்களைப் பாடினார். பாடல்கள் கொஞ்சம் மட்டும் தான், முழுதாக இல்லை.
2. கண்ணாமூச்சி... (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
3. அன்பே சுகமா... (பார்த்தாலே பரவசம்)
4. எங்கே எனது கவிதை... (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) இது இராஜீவ் மேனனுக்குப்பிடித்த பாடல் என்றார் இசைப்புயல்.

பின்வரும் பாடல்கள் அனைத்தும் முழுதாகப் பாடப்பட்டன.
5. அடியே... (கடல்) சித் இற்றீராம்
6. ஹலோ...(இருவர்) நிதிமோகன் - இவர் தமிழைச் சரியாக உச்சரிக்கவில்லை.
7. புதிய மனிதா...(எந்திரன்) மனோ, அமீனா
8. வெண்ணிலவே...(மின்சாரக்கனவு) ஹரிஹரன், சின்மயி - ஹரிஹரன் சில தவறுகளுடன் இந்தப்பாடலைப் பாடினார்.

15/01/2013 - மாட்டுப் பொங்கல் திருநாள்
பின்வரும் பாடல்கள் அனைத்தும் சிறிது மட்டுமே பாடப்பட்டன.
9. எனக்கொரு...(பாய்ஸ்) கார்த்திக்
10. ஆத்தங்கர மரமே...(கிழக்குச்சீமையிலே) கார்த்திக், சின்மயி
11. அக்கடா...(இந்தியன்) நிதி மோகன்
12. ஜீலை மாதம்...(சின்மயி, பென்னி தயாள்)
13. என்றென்றும்...(அலைபாயுதே)நரேஷ் ஐயர், கார்த்திக், பென்னி தயாள்
14. கண்ணும்... (திருடா திருடா) கார்த்திக், பென்னி தயாள்
15. நிலா காய்கிறது...(இந்திரா) ஹரிஹரன்
16. உயிரே... (பம்பாய்) ஹரிஹரன், சித்ரா
17. புது வெள்ளை...(ரோஜா) ஹரிஹரன், சித்ரா
18. மூங்கில்...(கடல்) அபய், ஹரிணி (முழுப்பாடல்)
19. நெஞ்சினிலே...(உயிரே) சித்ரா - ஒரு சரணம்
20. நெஞ்சுக்குள்ளே...(கடல்) ஷக்திஸ்ரீ  கோபாலன் (முழுப்பாடல்)

இந்தப் பாடல் கூட மேடையில் பாட முடியுமா என என்னை எண்ணி வியக்க வைத்த பாடல்கள் பின்வருவன.
தீ..தீ.. (திருடா திருடா) - நிதி மோகன், இரஞ்சித் பரோட்(விஐபி இசையமைப்பாளர்)
புதிய மனிதா...(எந்திரன்) மனோ, அமீனா

இசைப்புயல் இது போன்ற நிகழ்ச்சிகளை சென்னையில் தொடர்ந்து செய்து வந்தால் என் போன்ற சுவைஞர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.