செவ்வாய், 19 ஜனவரி, 2016

ரஜினிமுருகன் - திறனாய்வு

பட்டையை மட்டுமல்ல, இலவங்கத்தையும் சேர்த்து கிளப்பியிருக்கிறார்கள் ரஜினிமுருகனில். "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" என்ன? அதையும் தூக்கிச்சாப்பிட்ருக்கிறார்கள். இந்த‌ச் சிரிப்பு மூட்டும் திருவிழா யானையை சென்னை வெள்ளம் வந்து ஈரச்சாக்குப் போர்த்தியமையால், படம் தாமதமாக வெளியாகியிருக்கிறது. கதையுடைத்தலைவி கீர்த்தி சுரேஷ், இற்றிதிவ்யாவை ஓரங்கட்டுவாரா எனப்பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். நகைச்சுவை சூரி, நாறோடு சேர்ந்த பூவாய் நாறியிருக்கிறார். இனி கண்டிப்பாக ஒரு பெரிய வட்டம் வருவார். ஏற்கனவே குறுவட்டில் வந்த பாடல்கள் இணையத்தில் பிய்த்து எறிய‌, இன்னும் புதிதாக இரண்டு பாடல்களையும் தந்து அசத்தியிருக்கிறார் இமான். அதுவும் கதையுடைத்தலைவி வரும் இடத்தில் வரும் பாடல் "இசைஞானியையே" நினைவு படுத்துகிறது. உங்களை தலைக்குவிப்பு தூக்கி பாரட்டுகிறோம் இமான். பொன்ராம் இயக்கத்தில், மதுரை வழக்கில் உள்ள இப்படம், அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. அப்புறம் என்ன, படம் பார்த்த அனைவரும், நம்ம மதுரை சாலமன் பாப்பையா குரலில் சொல்கிறார்கள், "அரும ஐயா, படம் நல்லாயிருக்குல்ல".

வெள்ளி, 8 ஜனவரி, 2016

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: அச்சம் என்பது மடமையடா
இசை: ஏ.ஆர்.இரகுமான்

ஏனோ வானிலை மாறுதே...
மணித்துளி போகுதே...
மார்பின் வேகம் கூடுதே...
மனமோ ஏதோ சொல்ல
வார்த்தை தேடுதே.....

கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்....
விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்....
இமை மூடிடு என்றேன்....

நகரும் நொடிகள்.....
கசையடி போலே
முதுகின் மேலே
விழுவதினாலே...
வரிவரிக் கவிதை
எழுதும் வலிகள்
எழுதா மொழிகள்....... எனது...!.

கடல் போலப் பெரிதாக நீ நின்றாய்.....
சிறுவன் நான்,
சிறு அலை மட்டும்தான்....
பார்க்கிறேன்...... பார்க்கிறேன்......!

எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று...
நான் வந்து நீராடும் நீரூற்று !.

ஓ ஓ ஓ
ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்
ஓசைகள் இல்லாத இரவே.....!
ஓ ஓ ஓ
நான் மட்டும் தூங்காமல் ஏங்கி
உன்போலக் காய்கின்றேன் நிலவே......!

கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே....!

கை நீட்டி..... உன்னைத்...
தீண்டவே பார்த்தேன்...
ஏன் அதில் தோற்றேன்...?

ஏன் முதல் முத்தம்
தரத் தாமதம் ஆகுது....?
தாமரை வேகுது....
தாமரை வேகுது....

தள்ளிப் போகாதே....
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே....
இருவர் இதழும்
மலர் எனும் முள்தானே.....!

தள்ளிப் போகாதே....
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே....
இருவர் இதழும்
மலர் எனும் முள்தானே.......!

தேகம் தடையில்லை... என நானும்
ஒரு வார்த்தை சொல்கின்றேன்....
ஆனால் அது பொய்தான்... என நீயும் 
அறிவாய் என்கின்றேன்....
அருகினில் வா.....!

(அடுக்கிசை)
கனவிலே தெரிந்தாய்
விழித்ததும் ஒளிந்தாய்
கனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்!
கண்களில் ஏக்கம்
காதலின் மயக்கம்
ஆனால் பார்த்த நிமிடம் ஒருவிதமான தயக்கம்
நொடி நொடியாய் நேரம் குறைய
என் காதல் ஆயுள் கரைய
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட
விதியின் சதி விளையாடுதே
எனை விட்டு பிரியாதன்பே.... எனை விட்டு பிரியாதன்பே
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ

அன்பே..

புதன், 6 ஜனவரி, 2016

என்னைக் கவர்ந்த பாடல் - வெள்ளை பூக்கள்

பாடல் : வெள்ளை பூக்கள் 
இசை : ஏ ஆர் ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து 
படம் : கன்னத்தில் முத்தமிட்டால்
பாடியவர் : எ ஆர் ரஹ்மான்

பல்லவி
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே 
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே 
மலரே சோம்பல் முறித்து எழுகவே 
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில் 
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறு முதல் சிரிப்பில்

வெள்ளை பூக்கள் ..
சரணம் 1
காற்றின் பேரிசையும் 
மழை பாடும் பாடல்களும் 
ஒரு மௌனம் போல் இன்பம் தருமா ?
கோடி கீர்த்தனமும் 
கவி கோர்த்த வார்தைகளும் 
துளி கண்ணீர் போல் பந்தம் தருமோ ?

வெள்ளை பூக்கள் ..
சரணம் 2
எங்கு சிறு குழந்தை 
தன் கைகள் நீட்டிடுமோ 
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே ?
எங்கு மனித இனம் 
போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ 
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே ?

வெள்ளை பூக்கள் ..