திங்கள், 12 செப்டம்பர், 2011

தமிழில் புதிய வார்த்தை சித்தாமாமா.


ஒராண்டு பதினொரு மாதங்கள் ஆன என் ஆண் மகவு, "பொற்கோ" சில நாட்களாகப் பேசி வருகிறான். "அம்மா, அப்பா, தண்ணி, மாமா, தாத்தா, சித்தி" எனச் சரியாகப் பேசி வருபவனுக்கு "சித்தப்பா" என்ற வார்த்தை சரியாக வரவில்லை. அதற்கு மாற்றாக‌ "சித்தாமாமா" எனக்கூறிவருகிறான். அவன் அவ்வார்த்தையைக் கூறும் பொழுது நாங்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

"குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்."

என்ற திருக்குறளுக்கொப்ப அவன் பேசுவதை நாங்கள் நாள்தோறும் சுவைத்து வருகிறோம்.