செவ்வாய், 27 டிசம்பர், 2016

தமிழறிவோம்.




திங்கள், 26 டிசம்பர், 2016

தமிழறிவோம்




சனி, 17 டிசம்பர், 2016

வினாவும் நானே விடையும் நானே

1. எக்ஸ்பி சகாப்தம் முடிந்து விட்டது என்கிறார்களே, நான் அதை இன்னும் பயன்படுத்தலாமா?
எக்ஸ்பியின் உலா முடிந்து விட்டது என மைக்ரோசாஃப்ட் அறிவித்தாலும், இன்னும் பல இணைய உலாவி மையங்களிலும் (browsing centre), பேரங்காடிகளில் (old big shopping malls) பில் போடும் இடங்களிலும், எக்ஸ்பி இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் வேறு ஏதேனும் ஒரு நச்சு நிரல் எதிர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்திக் கொண்டும், எக்ஸ்பி அப்டேட்டுகளை நீக்கியும், இணையம் பயன்படுத்த குரோம் உலவியைக் கொண்டும் பயன்படுத்தலாம் என்பது உண்மைதான். இருப்பினும் வேறு ஏதேனும் உபுண்டு போன்ற ஒரு திறமூல இயங்குதளத்திற்கு தங்களை மேம்படுத்திக் கொள்வது உகந்ததாக இருக்கும்.

2. யூட்யூப் தளத்திலுள்ள காணொளிகளை பதிவிறக்க செய்ய ஏதேனும் தளம் இருக்கிறதா?
Keepvid.com என்ற தளத்தை அணுகி அதிலுள்ள பெட்டியில் குறிப்பிட்ட காணொளியின் உரலியை (URL) இட்டு டவுண்லோட் பொத்தானைச் சொடுக்கவும். வெவ்வேறு வடிவங்களில் குறிப்பிட்ட காணொளியாது வகைப்படுத்தப்பட்டிருக்கும். தேவையான தொடுப்பைச் சொடுக்க, குறிப்பிட்ட வடிவத்தில் காணொளியானது பதிவிறங்கத் தொடங்கும். ஜாவா பிளக்கின் கொண்டு செய்யப்பட்டிருக்கும் இத்தளம் விரைவாகச் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 19 நவம்பர், 2016

கணினிச்சிரிப்புகள்

"நம்ம தலைவருக்கு ஃபேஸ் புக் பத்தி ஒன்னுமே தெரியாது போலிருக்கே..."
"ஏன் என்னாச்சு?"
"ஃபேஸ்புக்க பைண்டிங் பண்ணி நம்ம அலுவலக நூலகத்துல வச்சுட்டா அப்பப்ப பாத்துக்கலாம்ங்கறார்."

"அரசருக்கு எல்லாமே தெரியும் போலருக்கே?"
"எப்படி சொல்ற?"
"போர்ல வீரர்களுக்கு மாற்றாக ரோபோக்கள பயன்படுத்தலாம்கிறார்"
"அட நீ வேற.. ரோபோக்கள பயன்படுத்தினா புறமுதுகு சிக்கல் வராதில்லையா அதுக்குத்தான் அப்படிச் சொல்றார்.”

“நம்ம ஹெச் ஓ டி மேடத்துக்கு கம்ப்யூட்டர்ல அன்னா ஆவன்னா கூட தெரியாது போலருக்கே.”
“எப்டீ சொல்ற?”
“அடுத்த ப்ராஜெக்ட்ட நாம எம் எஸ் ஆஃபிஸீல பண்ணலாம்ன்னு சொன்னா, அதுக்கு அவுங்க அதுக்கெதுக்கு எம்.எஸ் ஆஃபிஸ் போகணும். நம்ம ஆஃபிஸுலேயே பண்ணலாமேன்னு சொல்றாங்களாம்.”

“டேய் ஒனக்குத் தெரியுமா? நா.. கூகுள்+, ஃபேஸ்புக், ட்விட்டர், ஸ்கைப் எல்லாத்துலயும் அக்கெளண்ட் வச்சிருக்கேன்.”
“ஒனக்கு வாழ்க்கைன்னா என்னான்னு தெரியுமாடா?”
“அடக்கடவுளே. எனக்குத் தெரியாதே. அதுக்குச் சீக்கிரமா லிங்க் அனுப்புடா.”

“தலைவர் மகளிரணித்தலைவி மேல ரொம்பக் கோவமா இருக்காரே ஏன்?”
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆண்ட்ராய்டுக்குப் போட்டியா நம்ம கட்சியிலர்ந்து பெண்ட்ராய்டு கைபேசி தருவோம்ன்னு மேடையிலயே அறிவிச்சுட்டாங்களாம்.”

தமிழ்க்கடிகை

கி.ஆ.பெ.விசுவநாதம்

முத்தமிழ்க்காவலர். கி.ஆ.பெ.விசுவநாதம்.

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: மீரா
பாடல்: வாலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமண்யம், ஆ ஷா போஸ்லே
Image result for meera tamil movie
ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
ஏன் விரித்தாய் சிறகை ..வா வா (ஒ பட்டர்பிளை )
அருகில் நீ வருவாயோ
உனக்காக திறந்தேன் மனதின் கதவை
ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
ஏன் விரித்தாய் சிறகை ..வா வா (ஒ பட்டர்பிளை )
எனையும் தான் உனைப்போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்
நெருங்கும்போது அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்
ஆகா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
ஆகா எனக்கும் கூட அடிமைக்கொலம் பிடிப்பதில்லையே
உனை நான் சந்தித்தேன் ...உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும்
திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை
ஆகா ஒ பட்டர்பிளை பட்டர்பிளை
மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே
ஆகா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே
உனை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர் பார்க்கும்
திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை
ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
ஏன் விரித்தாய் சிறகை ..
வா வா
ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
ஏன் விரித்தாய் சிறகை ..
அருகில் நீ வருவாயோ
உனக்காக திறந்தேன் மனதின் கதவை
ஆகா ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ..பட்டர்பிளை ...

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: அச்சம் என்பது மடமையடா பாடல்: பாவேந்தர் பாரதிதாசன் பாடியவர்: விஜய் யேசுதாஸ் இசை: ஏ.ஆர். இரகுமான்

அவளும் நானும் அமுதும் தமிழும் அவளும் நானும் அலையும் கடலும் அவளும் நானும் தவமும் அருளும் அவளும் நானும் வேரும் மரமும் ஆலும் நிழலும் அசைவும் நடிப்பும் அணியும் பணிவும் அவளும் நானும் அவையும் துணிவும் உழைப்பும் தழைப்பும் அவளும் நானும் அளித்தலும் புகழும் மீனும் புனலும் விண்ணும் விரிவும் வெட்பும் தோற்றமும் வேலும் கூரும் ஆறும் கரையும் அம்பும் வில்லும் பாட்டும் உரையும் நானும் அவளும் நானும் அவளும் உயிரும் உடம்பும் நரம்பும் யாழும் பூவும் மனமும் நானும் அவளும் உயிரும் உடம்பும் நரம்பும் யாழும் பூவும் மனமும் அவளும் நானும் தேனும் இனிப்பும் அவளும் நானும் சிரிப்பும் மகிழ்வும் அவளும் நானும் திங்களும் குளிரும் அவளும் நானும் கதிரும் ஒளியும் அவளும் நானும் அமுதும் தமிழும் அவளும் நானும் அலையும் கடலும் அவளும் நானும் தவமும் அருளும் அவளும் நானும் வேரும் மரமும் ஆலும் நிழலும் அசைவும் நடிப்பும் அணியும் பணிவும் அவளும் நானும் அவையும் துணிவும் உழைப்பும் தழைப்பும் அவளும் நானும் அளித்தலும் புகழும்

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

எழுபதாவது விடுதலை நாள் வாழ்த்துகள்

தமிழ் எக்காளம் தமது எழுபதாவது விடுதலை நாள் வாழ்த்துகளைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறது.

சனி, 11 ஜூன், 2016

முழுவதுமா படிக்கவும் - இனிக்கும் செய்தியல்ல....!


🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝
தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது! ’ என்று சொல்லியிருக்கிறார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

🐝தேனீ...
 .............உலகின் மிக சுவாரஸ்யமான,
நுணுக்கமான உயிரினம்.

🐝அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான
மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத்
தெரிந்துகொள்ளலாமா.............?

முதலில்... ஆச்சரியம். 

🐝தக்கனூண்டு
சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்
சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.

🐝தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச்
போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய்,
பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு
தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச்
சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும்
தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித
உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும்
காரணம்.

🐝தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப்,
வாட்ஸ்அப் முறைகளை விடத்
துல்லியமானது. 

🐝யானை, ஆமைகளுக்கு
ஞாபகசக்தி அதிகம் என்போம். 
ஆனால்,
அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி
கொண்டவை தேனீக்கள். 

🐝இதுபோல இன்னும்
பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு
உடம்பில் இருக்கின்றன. 

ஆனால், அதிர்ச்சி
தரும் விஷயம்... 

🐝அந்தத் தேனீக்கள் இப்போது
'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில்
இடம்பிடித்திருக்கின்றன.

🐝ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால்,
நிச்சயம் இதுதான். 

🐝ஒட்டுமொத்த மக்கள்
தொகையாலும் பூமிக்கு விளையாத
நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.

🐝அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு
சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப்
போர்வையைப் போத்துகிறது.

🐝தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி
தெரிந்துகொண்டால்தான், அது
காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட
நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.

🐝தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப்
பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப்
பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச்
சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

🐝''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு.
மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத்
தேனீ. 

🐝இதில் இந்திய, இத்தாலிய மற்றும்
கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.

🐝 மத்த தேனீக்கள்
தானாகவே காட்டில் வளரும். 

🐝ஒரு
குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில
நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித்
தேனீக்கள் (பெண்கள்) இருக்கும். 

🐝இதில் ஆண்
தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித்
தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித்
தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.

🐝ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது
மட்டும்தான் வேலை. 

🐝ஆண் தேனீக்கு,
ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப்
பாதுகாப்பதும் கடமை. 

🐝மற்ற எல்லா
வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.

🐝உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது,
தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச்
சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா
வேலைகளையும் பணித் தேனீக்கள்தான்
கவனிக்கும்.

🐝தேனீக்களின் பொறியியல் அறிவு
அபாரமானது. 

🐝தேன் கூட்டை அறுங்கோண
வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு
சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம
முழுசாப் பயன்படுத்த முடியும். 

🐝ஆண்
தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய
அறுங்கோண செல் வடிவத்தில் கூடு
கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர்
வடிவில் செல் கட்டும். 

🐝கூட்டின் கட்டுமானம்
திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித்
தேனீ அதில் முட்டையிடும்.

🐝பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான்
தேனீக்களின் உணவு. 

🐝அப்போதைய பசிக்கு
அப்போதே சாப்பிட்டுவிடும். 

🐝அப்புறம் ஏன்
தேன் சேகரிக்கிறது? 

🐝குளிர் காலங்கள், பூ
பூக்காத காலங்களில் உணவுத்
தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன்
சேகரிக்கிறது. 

🐝தேனீக்கள் தேன் சேகரித்துப்
பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த
உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.

🐝தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள்,
பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில்
இருக்கும் 'தேன் பை’யில்
சேகரித்துக்கொள்ளும். 

🐝அந்த மதுரம்
முழுவதும் செரிக்காமல், தேனீயின்
வயிற்றில் இருக்கும் நொதிகளுடன்
சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

🐝கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள்,
கூட்டின் வாசலில் காத்திருக்கும்
தேனீக்களிடம் அந்தத் திரவத்தை
ஒப்படைக்கும். 

🐝அதற்காக ஏப்பமிட்டு
ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து
திரவத்தை வெளியில் கொண்டுவந்து
எதிர் தேனீயின் வாயில் கொட்டும். 

🐝ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும். 

🐝கூட்டைப் பராமரிக்கும்
தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர்
ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி,
அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச்
சேர்க்கும். 

🐝பிறகு அந்தத் திரவத்தில்
இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக
தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.

🐝பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை
மெழுகைப் பூசிவைக்கும். 

🐝இத்தனை
நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம்
சுவைக்கும் தேன் உருவாகும். 

🐝தேன்
எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை
தேனிக்களுக்கு எனக் கூட்டில்
விட்டுத்தான் எடுப்பார்கள். 

🐝அதுதான் தேன்
சேகரிக்கும் தர்மம் !

🐝இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ
அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.

🐝இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான்
அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில்
வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப்
பறக்கும். 

அதை எந்த ஆண் தேனீ துரத்திப்
பிடிக்கிறதோ, அதோடுதான் இணை
சேரும் ராணி. 

🐝புணர்ச்சி முடிந்தவுடன்
ஆண் இறந்துவிடும். 

🐝அதன் பிறகு ராணித்
தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து
வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான்
வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

🐝தேன் சேகரிப்பதற்கான தகவல்களை
தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை
அட்டகாசமானது. 

🐝உணவுத் தேவை
ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள்
முன்னே சென்று பூக்கள் இருக்கும்
இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக்
கூட்டுக்குத் திரும்பும். 

🐝கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள்,
தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது
சோலை எந்தத் திசையில் எவ்வளவு
தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித்
தெரிவிக்கும்.

🐝இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட
நடனம் மற்றும் வாலாட்டு நடனம். 

வட்ட
நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள்
இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.

🐝வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை
ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே
பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு
நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது
என்றும் அர்த்தம். 

🐝வாலை வேகமாக
ஆட்டினால், சோலை அருகில் உள்ளது
என்றும், மெதுவாக ஆட்டினால்,
தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

🐝சூரியன், சோலையின் திசை, தங்கள்
கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும்
சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.

🐝இந்த நுட்பமான நடன ரகசியத்தைக்
கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர்
கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு
கொடுத்தார்கள்.

🐝தேன் சேகரிக்கும் போது தேனீக்களின்
காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின்
மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல்
உட்காரும்போது, விதவிதமான
கூட்டணியுடன் பரவும். 

🐝இதுதான்
காடுகளின், சோலைகளின் பரவலுக்குக்
காரணம். 

🐝தேனீக்களை அதிகம்
காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.

🐝காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே
இயற்கையாகவே அடர்ந்த காடுகள்
உருவாகிவிடும்!''

🐝''அழியும் உயிரினம் பட்டியலில் இடம்
பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன
ஆபத்து?''

🐝''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய
நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும்
உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில்
மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு
தேனீக்கள் அழிந்துவிட்டன. 
அதாவது,
தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42
சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 

🐝இன்னும்
இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.

🐝ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை
வரலாம்.

🐝தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம்,
Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD.
அதாவது கூட்டில் இருந்து உணவு
சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள்
கொத்துக் கொத்தாகக்
காணாமல் போய்விடும். 

🐝ராணி மட்டும்
கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள்
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு
கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால்,
ராணித் தேனீ என்ன செய்வதெனத்
தெரியாமல் குழம்பி, சீக்கிரமே
இறந்துவிடும். 

🐝இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும். 

🐝பணித்
தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு. 

🐝அதில்
முக்கியமானது... செயற்கை உரம்,
பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட
பயிர்கள். 

🐝செயற்கை உரத்தில் உள்ள நியோ
நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள்,
தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து
அவற்றின் நினைவுத்தினை
மழுங்கடித்துவிடும். 

🐝இதனால்
கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய்
பறந்துபோய் அலைந்து திரிந்து
இறந்துவிடும். 

🐝மரபணு மாற்றப்பட்ட உணவுப்
பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர்
சீட்ஸ்’ என்பார்கள். 
🐝அதாவது, அந்தப் பயிர்கள்
'விதை தானியத்தை’ உருவாக்காது.
மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.

🐝அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின்
மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம்
செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி,
ஒரு கட்டத்தில் தேனீக்களைக்
கொன்றேவிடும்.

🐝இப்படி விவசாயத்தில் 'வணிக
லாபத்துக்காக’ மனிதன் செய்த பல
மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.

🐝ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து
வருடங்களாக விவசாய உற்பத்தி
பெருமளவு குறைந்து வருவதற்குக்
காரணம் தேனீக்களின் இறப்பு எனத்
தெரியவந்தது. 

🐝அதனால், அங்கு செயற்கை
உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள்
போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர்.

🐝வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து
தங்கள் வயல்களில் பறக்கவிட்டு
மகரந்தச்சேர்க்கை உண்டாக்க
முயற்சிக்கிறார்கள். 

🐝பல லட்சம் தேனீக்களை
அழித்த த‌ன்நல மனிதனால், ஒரே ஒரு
தேனீயைக்கூட உருவாக்க முடியாது.

🐝இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று
வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

🐝'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

சனி, 12 மார்ச், 2016

வாகை சூடிய வாமணி - எழுத்தாளர் வா.மணிகண்டனுடன் ஒரு நேர்காணல்



எழுத்தால் ஈட்டிய இன்பொருள் கொண்டு
ஏழை மாணவர் இதயம் பயில‌
ஆறுதல் தந்து அறப்பணி செய்யும்
வண்ணம் மிகுந்த வாமணி நீயே.



கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தில் சுஜாதா எழுத்தில் வரும் ஓர் உரையாடல்,
ஒர் எழுத்தாளனைப் பேசச்சொல்வது முதல் தவறு"
மாதவனின் இந்த உரையாடல் கேட்டு அவையே படத்தில் கைதட்டும். நாமும் அது போலத்தான் பூனை போல் இருக்கும் ஓர் எழுத்தாளர் என்ன பேசுவார் என்ற நோக்கில் வா.மணிகண்டன் இல்லம் சேர்ந்தோம். அமைதியாக வரவேற்பறையில் அமர வைத்து, “வாங்க.. போங்க..” கொங்குத் தமிழில் இனிமையாகப் பேசினார்.
இவரைப்பற்றி “ஈரோடு மாவட்டம் கரட்டடிபாளையம்” என்று தட்டினால் இணையம் காண்பிக்கிறது. சுருங்கக்கூறினால், இவரது பிள்ளையை, குடும்பத்தை இவரது பெற்றோர் பார்த்துக் கொள்வதால் இவரால் எழுத்துலகில் பரிமளிக்க முடிகிறது. வலைப்பூ எழுத்தாளர்”, “நிசப்தம் அறக்கடளை நிறுவனர்”, “கடலூர் வெள்ளத்திற்கு அறுபது இலகரங்கள் உதவியவர்”, “2016 ஆம் ஆண்டுக்கான டாப் 10 நம்பிக்கை மனிதர்களில் ஒருவ ராக ஆனந்த விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்”. என்று இவரது பேர், புகழ் கூடிக்கொண்டே போனாலும் துளியளவும் செருக்கின்றி இனிதாய் அளவளாவுகிறார். அவரது உரையாட்டிலிருந்து நாம் தொகுத்தவை.
எழுதத் தூண்டு கோலாக இருந்தது?
எழுத்தாளர் சுஜாதாதான். அவர் எழுத்தைப் படித்தது, அவர் ஒரு வாரத்தில் ஏழு நாட்களில், ஏழு கதைகள், எழு இதழ்களில் எழுதியிருக்கிறார். எந்தக் குழப்பமுமில்லை. எழுத்தில் யாருமே செய்யாத ஒன்று இது.”
அதோடு மூன்றாம் வகுப்பு முதல் தமிழ் வழிக்கல்வி கற்றதுதான். எழுத்தாளர் மனுஷ்யபுத்ரனின் அறிமுகம் கிடைத்தது. அவர் புதிய இலக்கியங்களின் பக்கம் எனது ஆர்வத்தைத் திருப்பி விட்டார்.”
அறக்கட்டளை எண்ணம் எப்படி வந்தது?
குடும்பப் பொறுப்புமில்லாமல் இந்த வயதில் வாழ்க்கை வாய்ப்பது வரம் என்று புரிந்து கொண்ட போதுதான் நிசப்தம் அறக்கட்டளையைத் தொடங்கும் எண்ணம் உதித்தது. எழுத்துல கெடைக்கற பணத்த என்ன செய்யறது அப்டீன்னு நெனைக்கறப்பத்தான் இந்த மாதிரி எண்ணம் வந்தது. அறங்காவலர், பொறுப்பாளி (trustee) அப்டீன்னு நா. யாரையும் சேக்கல. அலுவலகமும் இல்ல. என்னோட வீடுதான் அலுவலகம். என்னப்பத்தி தெரிஞ்சவங்க. நண்பர்கள். எல்லாரும் உதவுறாங்க. ஏழை மாணவர்களுக்கு என்னால முடிஞ்சதைச் செய்யறேன்.”
நிசப்தம் அறக்கட்டளைக்கு வெள்ள நிவாரண நிதி அறுபது இலகரங்கள் வந்திருக்கே. ஆனந்த விகடன் நம்பிக்கை மனிதர்கள் வரிசையில வந்திருக்கிங்க‌ எப்படி இருக்கு இந்த சேதி?
எல்லாமே தானா நடக்கறதுதான். நா. கடலூர்ல வெள்ள நிவாரணத்துக்கு ஒதவுறதப் பாத்துட்டுதான், அறக்கட்டளைக்கு பணம் நெறைய வரத் தொடங்கிச்சு. 2015ல ஆனந்த விகடன்ல என்னோட கலந்துரையாடல் நடத்தினாங்க. இப்ப 2016ல தேர்ந்தெடுத்திருக்காங்க. நாம செய்யறத நாம செய்யறோம் அவ்வளவுதான்.”
எப்படி எழுதுகிறீர்கள்?
தமது வரவேற்பறையில் அகன்று இருக்கும், ஒளி உமிழ் இருமுனையத் தொலைக்காட்சியைக் (LED-Light Emitting Diode TV) காட்டிப் பேசுகிறார். “நான் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. பத்து மணிக்கு எல்லோரும் உறங்கப் போய் விடுவார்கள். நமக்கு பத்துலர்ந்து ரெண்டு மணிவரைக்கும் நேரம் இருக்குது. இந்த நேரத்துல நான் எழுதறதுதான் இதழ்கள்ல நாளேடுகள்ல‌ வர்றது.”
தொலைக்காட்சி பாக்கறதில்லைங்கறீங்க, ஆனா ஒங்க செல்லுலாய்ட் சிறகுகள் அயல் நாட்டுப்படங்கள் பத்தி பேசுதே” இது நாம்.
சிரிப்புடன் தொடர்கிறார். “நா.. பாக்கறதேல்லாம் அடர் குறுவட்டுத்தான் (DVD). வாரத்துக்கு இரண்டு படம் அயல் மொழில பாத்துருவேன். அதப்பத்திதான் செல்லுலாய்ட் சிறகுகள்ல எழுதிக்கிட்டு வர்றேன். சில உதவி இயக்குநர்கள் கூட அவங்க படத்து எதாவது உதவி கேக்கறாங்க. ஆனா இன்னும் என் பேர போடத் தொடங்கல.”
எழுத்தின் எதிர்காலம் எப்படி?
எழுத்திற்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது. என்ன எழுத வேண்டும் என்று மட்டும் மனதில் கொண்டு எழுதத் தொடங்குங்கள். ‘எல்லோரும் புகழ வேண்டும்’, ‘நிறைய பணம் ஈட்ட வேண்டும்’ என்றெல்லாம் நினைத்துக் கொண்டு எழுதினால் மக்கள் உங்கள் எழுத்தைப் புறக்கணிக்கக்கூடும். நீங்கள் எழுதுவதை ஈடுபாட்டுடன் செய்து வந்தால் அதற்குரிய சன்மானம் உங்களை வந்து சேரும். தொடக்கத்தில் நான் வலைப்பூவில் எழுதத் தொடங்கிய நேரம், முகந்தெரியாத ஆட்களின் வசைமொழி காரணமாக கருத்துரைப் பெட்டியையே, எடுத்து விட்டேன். இப்போது என் தளத்தில் கருத்துரை இருக்கிறது. இன்று என்னை எழுத்தாளன் என்று கொண்டாடுகிறார்கள்.” சிரிக்கிறார்.
இன்று எல்லாமே கணினியுகம். நாமும் அதோடு சேர்ந்து போராட வேண்டும். நாம் எதேனும் ஒன்று எழுதினால் அதைப்படித்துப் பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் செயல்பட வேண்டும். நான் கூட, ‘அறிவில் அம்மணமாக இருக்க வேண்டும்.’ என்று எழுதியிருக்கிறேன். தெரியாததைப் பற்றி எழுதி வாங்கிக்கட்டிக் கொள்ளக்கூடாது. இன்று தொழிற்நுட்பத்தில் எதுவும் தெரியவில்லை என்றால், எல்லாரும் கூகுளில் தேடுகிறார்கள். யாரும் நூலினை எடுத்துப் படிப்பதில்லை. சுவையாரத்தோடு எழுதினால், கண்டிப்பாக நமது எழுத்து மக்களைச் சென்று சேரும்.
தமிழ் கம்ப்யூட்டர் போன்ற தொழிற்நுட்ப இதழ்கள் படிப்பதுண்டா?
தொடர்ந்து வாசிப்பதில்லை. நேரம் கிடைக்கும்பொழுது வாசிப்பதுண்டு. தமிழ் கம்ப்யூட்டர் நன்றாக செய்கிறார்கள். இருப்பினும், தொழிற்நுட்ப உலகில் போட்டி போட‌ இன்னும் தகவல்களை அள்ளித்தர வேண்டும். இல்லையெனில் தொழிற்நுட்ப இதழ்களை இணையம் விழுங்கிவிடும். இது எதிர்மறையானது அல்ல. நாணயத்தின் மறுபக்கம். (Other side of the coin)” நாம் கொடுத்த தமிழ் கம்ப்யூட்டர் இதழினை பெற்றுக்கொண்டே தெளிவுபட பேசினார் வா.ம‌.

செவ்வாய், 19 ஜனவரி, 2016

ரஜினிமுருகன் - திறனாய்வு

பட்டையை மட்டுமல்ல, இலவங்கத்தையும் சேர்த்து கிளப்பியிருக்கிறார்கள் ரஜினிமுருகனில். "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" என்ன? அதையும் தூக்கிச்சாப்பிட்ருக்கிறார்கள். இந்த‌ச் சிரிப்பு மூட்டும் திருவிழா யானையை சென்னை வெள்ளம் வந்து ஈரச்சாக்குப் போர்த்தியமையால், படம் தாமதமாக வெளியாகியிருக்கிறது. கதையுடைத்தலைவி கீர்த்தி சுரேஷ், இற்றிதிவ்யாவை ஓரங்கட்டுவாரா எனப்பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். நகைச்சுவை சூரி, நாறோடு சேர்ந்த பூவாய் நாறியிருக்கிறார். இனி கண்டிப்பாக ஒரு பெரிய வட்டம் வருவார். ஏற்கனவே குறுவட்டில் வந்த பாடல்கள் இணையத்தில் பிய்த்து எறிய‌, இன்னும் புதிதாக இரண்டு பாடல்களையும் தந்து அசத்தியிருக்கிறார் இமான். அதுவும் கதையுடைத்தலைவி வரும் இடத்தில் வரும் பாடல் "இசைஞானியையே" நினைவு படுத்துகிறது. உங்களை தலைக்குவிப்பு தூக்கி பாரட்டுகிறோம் இமான். பொன்ராம் இயக்கத்தில், மதுரை வழக்கில் உள்ள இப்படம், அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. அப்புறம் என்ன, படம் பார்த்த அனைவரும், நம்ம மதுரை சாலமன் பாப்பையா குரலில் சொல்கிறார்கள், "அரும ஐயா, படம் நல்லாயிருக்குல்ல".

வெள்ளி, 8 ஜனவரி, 2016

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: அச்சம் என்பது மடமையடா
இசை: ஏ.ஆர்.இரகுமான்

ஏனோ வானிலை மாறுதே...
மணித்துளி போகுதே...
மார்பின் வேகம் கூடுதே...
மனமோ ஏதோ சொல்ல
வார்த்தை தேடுதே.....

கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்....
விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்....
இமை மூடிடு என்றேன்....

நகரும் நொடிகள்.....
கசையடி போலே
முதுகின் மேலே
விழுவதினாலே...
வரிவரிக் கவிதை
எழுதும் வலிகள்
எழுதா மொழிகள்....... எனது...!.

கடல் போலப் பெரிதாக நீ நின்றாய்.....
சிறுவன் நான்,
சிறு அலை மட்டும்தான்....
பார்க்கிறேன்...... பார்க்கிறேன்......!

எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று...
நான் வந்து நீராடும் நீரூற்று !.

ஓ ஓ ஓ
ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்
ஓசைகள் இல்லாத இரவே.....!
ஓ ஓ ஓ
நான் மட்டும் தூங்காமல் ஏங்கி
உன்போலக் காய்கின்றேன் நிலவே......!

கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே....!

கை நீட்டி..... உன்னைத்...
தீண்டவே பார்த்தேன்...
ஏன் அதில் தோற்றேன்...?

ஏன் முதல் முத்தம்
தரத் தாமதம் ஆகுது....?
தாமரை வேகுது....
தாமரை வேகுது....

தள்ளிப் போகாதே....
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே....
இருவர் இதழும்
மலர் எனும் முள்தானே.....!

தள்ளிப் போகாதே....
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே....
இருவர் இதழும்
மலர் எனும் முள்தானே.......!

தேகம் தடையில்லை... என நானும்
ஒரு வார்த்தை சொல்கின்றேன்....
ஆனால் அது பொய்தான்... என நீயும் 
அறிவாய் என்கின்றேன்....
அருகினில் வா.....!

(அடுக்கிசை)
கனவிலே தெரிந்தாய்
விழித்ததும் ஒளிந்தாய்
கனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்!
கண்களில் ஏக்கம்
காதலின் மயக்கம்
ஆனால் பார்த்த நிமிடம் ஒருவிதமான தயக்கம்
நொடி நொடியாய் நேரம் குறைய
என் காதல் ஆயுள் கரைய
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட
விதியின் சதி விளையாடுதே
எனை விட்டு பிரியாதன்பே.... எனை விட்டு பிரியாதன்பே
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ

அன்பே..

புதன், 6 ஜனவரி, 2016

என்னைக் கவர்ந்த பாடல் - வெள்ளை பூக்கள்

பாடல் : வெள்ளை பூக்கள் 
இசை : ஏ ஆர் ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து 
படம் : கன்னத்தில் முத்தமிட்டால்
பாடியவர் : எ ஆர் ரஹ்மான்

பல்லவி
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே 
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே 
மலரே சோம்பல் முறித்து எழுகவே 
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில் 
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறு முதல் சிரிப்பில்

வெள்ளை பூக்கள் ..
சரணம் 1
காற்றின் பேரிசையும் 
மழை பாடும் பாடல்களும் 
ஒரு மௌனம் போல் இன்பம் தருமா ?
கோடி கீர்த்தனமும் 
கவி கோர்த்த வார்தைகளும் 
துளி கண்ணீர் போல் பந்தம் தருமோ ?

வெள்ளை பூக்கள் ..
சரணம் 2
எங்கு சிறு குழந்தை 
தன் கைகள் நீட்டிடுமோ 
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே ?
எங்கு மனித இனம் 
போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ 
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே ?

வெள்ளை பூக்கள் ..