வியாழன், 17 ஜனவரி, 2013

இனியவை இருபது - இசைப்புயலின் தாய் மண்ணே வணக்கம்

இசைப்புயலின் தாய் மண்ணே வணக்கம் சென்னை இசை நிகழ்ச்சி செயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. அதில் என்னைக் கவர்ந்த இருபது பாடல்களை இனியவை இருபது என தொகுத்தளித்திருக்கிறேன்.

14/01/2013 - பொங்கல் திருநாள்
1. தீ..தீ.. (திருடா திருடா) - நிதி மோகன், இரஞ்சித் பரோட்(விஐபி இசையமைப்பாளர்)
புதியதாய் இந்த இசைக்கருவியினை இசைக்கத் தொடங்கியுள்ளேன். தவறிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்றார் இசைப்புயல். பிறகு தடவித்தடவி ஏதோ ஒரு பெயர் தெரியாத இசைக்கருவியினை வாசித்தார்.

இதைத் தொடர்ந்து வந்த சித்ரா மெட்டுமாறா புதிய பதிப்பாக பின்வரும் பாடல்களைப் பாடினார். பாடல்கள் கொஞ்சம் மட்டும் தான், முழுதாக இல்லை.
2. கண்ணாமூச்சி... (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
3. அன்பே சுகமா... (பார்த்தாலே பரவசம்)
4. எங்கே எனது கவிதை... (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) இது இராஜீவ் மேனனுக்குப்பிடித்த பாடல் என்றார் இசைப்புயல்.

பின்வரும் பாடல்கள் அனைத்தும் முழுதாகப் பாடப்பட்டன.
5. அடியே... (கடல்) சித் இற்றீராம்
6. ஹலோ...(இருவர்) நிதிமோகன் - இவர் தமிழைச் சரியாக உச்சரிக்கவில்லை.
7. புதிய மனிதா...(எந்திரன்) மனோ, அமீனா
8. வெண்ணிலவே...(மின்சாரக்கனவு) ஹரிஹரன், சின்மயி - ஹரிஹரன் சில தவறுகளுடன் இந்தப்பாடலைப் பாடினார்.

15/01/2013 - மாட்டுப் பொங்கல் திருநாள்
பின்வரும் பாடல்கள் அனைத்தும் சிறிது மட்டுமே பாடப்பட்டன.
9. எனக்கொரு...(பாய்ஸ்) கார்த்திக்
10. ஆத்தங்கர மரமே...(கிழக்குச்சீமையிலே) கார்த்திக், சின்மயி
11. அக்கடா...(இந்தியன்) நிதி மோகன்
12. ஜீலை மாதம்...(சின்மயி, பென்னி தயாள்)
13. என்றென்றும்...(அலைபாயுதே)நரேஷ் ஐயர், கார்த்திக், பென்னி தயாள்
14. கண்ணும்... (திருடா திருடா) கார்த்திக், பென்னி தயாள்
15. நிலா காய்கிறது...(இந்திரா) ஹரிஹரன்
16. உயிரே... (பம்பாய்) ஹரிஹரன், சித்ரா
17. புது வெள்ளை...(ரோஜா) ஹரிஹரன், சித்ரா
18. மூங்கில்...(கடல்) அபய், ஹரிணி (முழுப்பாடல்)
19. நெஞ்சினிலே...(உயிரே) சித்ரா - ஒரு சரணம்
20. நெஞ்சுக்குள்ளே...(கடல்) ஷக்திஸ்ரீ  கோபாலன் (முழுப்பாடல்)

இந்தப் பாடல் கூட மேடையில் பாட முடியுமா என என்னை எண்ணி வியக்க வைத்த பாடல்கள் பின்வருவன.
தீ..தீ.. (திருடா திருடா) - நிதி மோகன், இரஞ்சித் பரோட்(விஐபி இசையமைப்பாளர்)
புதிய மனிதா...(எந்திரன்) மனோ, அமீனா

இசைப்புயல் இது போன்ற நிகழ்ச்சிகளை சென்னையில் தொடர்ந்து செய்து வந்தால் என் போன்ற சுவைஞர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

0 Comments: