சனி, 31 டிசம்பர், 2011

என்னைக் கவர்ந்த பாடல்


படம்: சிகரம்
பாடல்: வைரமுத்து
இசைய‌மைத்துப் பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
நடிப்பு: இராதா, எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

பல்லவி

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னைத் தொட ஏணி இல்லை - வண்ணம்.

சரணம் 1

பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
சுவாசிக்க ஆசையில்லை - 2
கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளித்தள்ளி நீயிருந்தால்
சொல்லிக் கொள்ள வாழ்க்கையில்லை. - வண்ணம்

சரணம் 2

நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி- 2
கன்னி உன்னைப் பாத்திருப்பேன்
கால் கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும்வரை
மேகம் போல் நான் மிதப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன். - வண்ணம்