சனி, 19 நவம்பர், 2016

கணினிச்சிரிப்புகள்

"நம்ம தலைவருக்கு ஃபேஸ் புக் பத்தி ஒன்னுமே தெரியாது போலிருக்கே..."
"ஏன் என்னாச்சு?"
"ஃபேஸ்புக்க பைண்டிங் பண்ணி நம்ம அலுவலக நூலகத்துல வச்சுட்டா அப்பப்ப பாத்துக்கலாம்ங்கறார்."

"அரசருக்கு எல்லாமே தெரியும் போலருக்கே?"
"எப்படி சொல்ற?"
"போர்ல வீரர்களுக்கு மாற்றாக ரோபோக்கள பயன்படுத்தலாம்கிறார்"
"அட நீ வேற.. ரோபோக்கள பயன்படுத்தினா புறமுதுகு சிக்கல் வராதில்லையா அதுக்குத்தான் அப்படிச் சொல்றார்.”

“நம்ம ஹெச் ஓ டி மேடத்துக்கு கம்ப்யூட்டர்ல அன்னா ஆவன்னா கூட தெரியாது போலருக்கே.”
“எப்டீ சொல்ற?”
“அடுத்த ப்ராஜெக்ட்ட நாம எம் எஸ் ஆஃபிஸீல பண்ணலாம்ன்னு சொன்னா, அதுக்கு அவுங்க அதுக்கெதுக்கு எம்.எஸ் ஆஃபிஸ் போகணும். நம்ம ஆஃபிஸுலேயே பண்ணலாமேன்னு சொல்றாங்களாம்.”

“டேய் ஒனக்குத் தெரியுமா? நா.. கூகுள்+, ஃபேஸ்புக், ட்விட்டர், ஸ்கைப் எல்லாத்துலயும் அக்கெளண்ட் வச்சிருக்கேன்.”
“ஒனக்கு வாழ்க்கைன்னா என்னான்னு தெரியுமாடா?”
“அடக்கடவுளே. எனக்குத் தெரியாதே. அதுக்குச் சீக்கிரமா லிங்க் அனுப்புடா.”

“தலைவர் மகளிரணித்தலைவி மேல ரொம்பக் கோவமா இருக்காரே ஏன்?”
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆண்ட்ராய்டுக்குப் போட்டியா நம்ம கட்சியிலர்ந்து பெண்ட்ராய்டு கைபேசி தருவோம்ன்னு மேடையிலயே அறிவிச்சுட்டாங்களாம்.”

தமிழ்க்கடிகை

கி.ஆ.பெ.விசுவநாதம்

முத்தமிழ்க்காவலர். கி.ஆ.பெ.விசுவநாதம்.