திங்கள், 3 ஆகஸ்ட், 2009

இன்னா செய்தாரை குறள்படி ஒறுத்தல் இந்நாட்களில் இயலுமா????

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்."
அருமையான குறள். கி.முவிலேயே திருவள்ளுவரால் இயற்றப்பட்டது.

இதற்கொப்ப வாழ்ந்தவர் என்று சொன்னால் இயேசு பெருமானை மட்டுமே சொல்ல இயலும். தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காக ஆண்டவரிடம் இறைஞ்சியவர் அந்த மாபெருமான்.

பின்னாளில் வந்தவர்கள், நமது நாட்டுத்தந்தையினைச் எடுத்துக்காட்டாகச் சுட்டுகையில், "உண்மையுடன் தமக்கு நேர்ந்த தேர்வுகளை நூலில் மறைக்காமல் எழுதியுள்ள ஒரே தலைவர். "என்றே இன்றும் பறைசாற்றிவருகின்றார்கள்.

அவரும் ஓரளவு எதிரிகளை ஒறுத்துவிட்டார் என்றே தோன்றுகிறது. அறப்போர் முறையில் விடுதலை பெற்றுத்தந்தவர் தமக்கென ஒரு சமயத்தைத் தோன்றுவிக்காதது பேராறுதல்.

அதையெல்லாம் விடுங்கள். இன்னா செய்தாரை குறள் படி ஒறுப்பவரின் (யாராவது உள்ளனரா?) இன்றைய உடனடி நிலை என்ன‌ என்பது எல்லோருக்கும் தெரியும். பின்னாளைய நிலையினை வரலாறுதான் கூறவேண்டும்.

0 Comments: