வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

என்னைக் கவர்ந்த பாடல்


பாடல்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமண்யம் குழுவினர்
தொடர்: நம்பிக்கை
தயாரிப்பு: ஏவிஎம்

பல்லவி

நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை
நம்பிக்கை இல்லாமல் நாளை இல்லை.
நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை
நம்பிக்கை இல்லாமல் வாழ்வு இல்லை.

சரணம் 1

அப்பா என்னும் உறவும் கூட அம்மா கொடுத்த நம்பிக்கை
ஆண்டவன் என்னும் கற்பனை கூட அச்சம் கொடுத்த நம்பிக்கை. (ஒ...ஒ)
விதியே பெரியது என்பவர்க்கெல்லாம் காத்துக் கருப்பில் நம்பிக்கை
மதியே பெரியது என்பவர்க்கெல்லாம் நம்பிக்கை மீதே நம்பிக்கை
அந்தரத்திலே பூமி சுற்றலும் ஆகாயத்தில் நிலவு நிற்றலும்
எல்லைக்குள்ளே கடல்கள் நிற்றலும் இதயக்கூட்டிலே ஜீவன் நிற்றலும்
நம்பிக்கை நம்பிக்கை அது
நம்பிக்கை நம்பிக்கை - (நம்பிக்கை)

சரணம் 2

இரத்தம் சத்தம் போடும் வயதில் நான் தான் என்பது நம்பிக்கை
ஓடி ஆடி ஓய்ந்த வயதில் ஊன்றுகோல் மீது நம்பிக்கை. (ஒ...ஒ)
அடுத்த வருடம் மழை வரும் என்பது உழவன் கொண்ட நம்பிக்கை
அடுத்த தேர்தலில் ஆட்சி என்பது அரசியல்வாதியின் நம்பிக்கை.
தலைக்கு மேலே வானம் இருப்பதும்
தரைக்கு மேலே கால்கள் இருப்பதும்
காசு பணங்கள் சேர்த்து வைப்பதும்
தூங்கி விழிப்போம் என்று நினைப்பதும்
நம்பிக்கை நம்பிக்கை அது
நம்பிக்கை நம்பிக்கை - (நம்பிக்கை)

குறிப்பு: இப்பாடலுக்கு இசை தினாவா, இமானா என்று தெரிந்தவர்கள் தெரியப்படுத்தலாம்.

0 Comments: