வியாழன், 8 நவம்பர், 2012

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: கடல்
பாடியவர்: ஷக்திஸ்ரீ  கோபாலன்
இசை: ஏ.ஆர். இரகுமான்

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்க.

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்க.
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

வெள்ள பார்வ வீசி விட்டீர் முன்னாடி.
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி.

வண்ண மணியாரம்
வளருது கெடிகாரம்
ஆனை புலியெல்லாம்
அடங்கும் உன் அதிகாரம்.

நீர் போன பின்னும் நிழல் மட்டும்.
போகலையே போகலையே
நெஞ்சுகுழியில் நிழல் வந்து.
விழுந்திருச்சே

அப்ப நிமிந்தவ தான்.
அப்பறமா குனியலையே குனியலையே.
கொடகம்பி போல மனம்.
குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்க.

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்க.
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

பச்சி ஊரங்கிருச்சு
பால், தயிரா தூங்கிருச்சு.
இச்சி மரத்து மேல.
இல கூட தூங்கிருச்சு.

காச நோய்க்காரிகளும்
கண்ணுரங்கும் வேளையில
ஆச நோய் வந்தமக.
அர நிமிசம் தூங்கலையே.

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்க.
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

ஒரு வாய் இறங்கலையே.
உள் நாக்கு நனையலையே.
ஏழெட்டு நாளா
எச்சில் முழுங்கலையே

யேல இளஞ்சிருக்கி
எதோ சொல்ல முடியலையே.
ரப்பர் வள‌விக்கெல்லாம்
சத்தமிட வாயில்லையே

ஓ...நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்க.
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

வெள்ள பார்வ வீசி விட்டீர் முன்னாடி.
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி.

வண்ண மணியாரம்
வளருது கெடிகாரம்
ஆனை புலியெல்லாம்
அடங்கும் உன் அதிகாரம்.

நீர் போன பின்னும் நிழல் மட்டும்.
போகலையே போகலையே
நெஞ்சுகுழியில் நிழல் வந்து.
விழுந்திருச்சே

அப்ப நிமிந்தவ தான்.
அப்பறமா குனியலையே குனியலையே.
கொடகம்பி போல மனம்.
குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்க.

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்க.
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

0 Comments: