சனி, 19 ஆகஸ்ட், 2023

கனவைத் தேடி

அந்தி நேரத்து மணியோசை குயிலுடன் கூடிய கூவலுடன் இணைந்தே ஒலித்தது. மாலைப் பறவைகள் கூடு தேடிச் செல்லும் பொழுதில் படித்துறையில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தான் மயிலன். அந்தி நேரத்தில் தானெழுதிய அகக்காண் அட்டைக் குறிப்புகளை கண்முன்னே கொணர்ந்து மூளையேற்றிக் கொள்தல் மயிலனின் வழக்கம்.

"கனவு மூவகைப்படும்: முதலாவது தூக்கத்தில் வருவது, அடுத்தது சோம்பலில் வரும் பகற்கனவு, மற்றொன்று குறிக்கோள் கனவு." எப்போதோ, யாரோ எழுதிய கவிதையை வாசித்தது உள்ளத்தில் உதித்தது மயிலனுக்கு.
1. நன்கு பயின்று பள்ளியில் முதல்வனாக வேண்டும்.
2. அருமையான வேலையினை எளிமையாக முடிக்க வேண்டும்.
3. நால்வருக்கு நன்மை செய்து நற்றோனாக வாழ வேண்டும்.
அகக்காண் அட்டைப் பதிவுகளை மீண்டும் ஒரு முறை படித்து ஏற்றிக் கொண்டான். பதிவுகளைப் படித்து முடித்த நேரம்,
"வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி" என்ற பாடல் ஒலிப்பானில் வரத் தொடங்கிற்று.
நீதி: குறிக்கோள் கனவை நாடோறும் பயின்று வரின் நிகழும்.

0 Comments: