திங்கள், 28 அக்டோபர், 2013

எங்கோ எதிலோ படித்தது

எழுந்துவிட்ட அதிகாலை

எழுப்பிவிட்ட கடிகாரம்

காத்திருக்கும் கடமை

இன்னும் உறங்கும் நண்பன்

சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்

இயந்திரம் தந்த இதமான வெந்நீர்

விரும்பிய இசைபாடும் குறுவட்டு

சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்

இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை

எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்

இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு

இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்

நாளைய காலையின் விழிப்பிலாவது  
 
                 தாயின் , "மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாருஎனும் குரல் கேட்காதா 


என்ற எதிர்பார்ப்போடு..... 


இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்

மென்பொருள் வல்லுனன்.

0 Comments: