ஞாயிறு, 11 ஜூன், 2017

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
பாடல்: யுகபாரதி
குரல்: பிரதீப் குமார்
இசை: டி.இமான்

திரும்பத் திரும்ப இந்தப் பாட்டைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.
பிரதீப் குமார், இமான் இசையில் பாடும் இரண்டாவது பாடல் இது.
இமான் இசையில் முதல் பாடல் மாவீரன் கிட்டு படத்தில் ‍- உயிரெல்லாம் ஒன்றே. (https://www.youtube.com/watch?v=Y2no5nz4tdU)
திரையில் முதல் பாடல் எந்திரன் படத்தில் அடுக்கிசையும் (Rap), கரைநாட்டு இசையும் சேர்ந்து வரும் எந்திரன் பூம் பூம் ரோபோ... இசை. (https://www.youtube.com/watch?v=75MVKtnOLlQ)  இதில் கரை நாட்டு இசையை மட்டும் பாடியவர்.
ஐந்து அகவை முதலே இசை கற்று வரும் பிரதீப் குமார், தன் கரைநாட்டு இசைக் குரலில் அருமையாகப் பாடியுள்ளார்.
கண்ணியில் (சரணத்தில்) வெளிச்சம் படத்தில் மனோஜ் கியான் இசையில் வரும் துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே பாட்டில் வரும் அதே சாயலில் வந்தாலும்,(பூமி என்னும் பெண்ணும்...) இமான் தன் இசையால் தூக்கி நிறுத்துகிறார். (https://www.youtube.com/watch?v=GyJlJXiS8u4)
கேட்க எளிமையாக இருப்பினும், எளிமையாக இப்பாடலைப் பாட முடியது. அதற்குக் காரணம் பிரதீபின் குரல் மிகுதியான அணுக்கங்களை பாடல் முழுக்க அள்ளி இரைத்திருப்பதுதான்.
கண்ணி முடிந்து, எடுப்பு (பல்லவி) தொடங்கும் இடத்தில், இணைப்புக்காக கலவை  (mix) செய்திருப்பது இமானின் நடை. அங்கு மட்டும் பிரதீப் குரலோடு சேர்த்து இமானின் குரலும் ஒலிக்கிறது. முதல் கண்ணிக்கு முன்னால் வரும், இமானின் குரல் இன்னொரு சிறப்பு. பிரதீப்பின் தனிக்குரலுக்காக இனி வரும் இசை நிகழ்ச்சிகளில் மேடைகளில் பாடப்படக்கூடிய பாடலாகவும் இஃது இருக்கலாம்.

0 Comments: