சனி, 16 பிப்ரவரி, 2019

என்னைக் கவர்ந்த கவிதை

ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தவளிடம்
வாய் வலிக்கவில்லையா என்றேன்
நீ தரும் முத்தங்களை விடவா என்று
வெட்கி புன்னகைத்தாள்
அத்தனை அழுத்தமா என்றேன்
ஒரு முறை நீ
நானாயிரு
தெரியும் என்றாள்
முயன்று தான்
பார்ப்போமே என்று
நான் உரைத்த தருணத்தில்
என்னை இழுத்தணைத்து
உறிஞ்செடுத்தாள் இதழ்களை
வண்டிடமே தேனெடுக்கும்
வித்தையறிந்த
வண்ண மலரவள்
- எம்.அருண்

0 Comments: