வெள்ளி, 1 ஏப்ரல், 2011

என்னைக் கவர்ந்த பாடல்

படம்:மின்சாரக்கனவு
பாட‌ல்: வைர‌முத்து
பாடிய‌வ‌ர்க‌ள்:எஸ்.பி.பால‌சுப்ர‌ம‌ணிய‌ம், மால்குடி சுபா
இசை: ஏ.ஆர்.இர‌குமான்

குறிப்பு:எஸ்.பி.பிக்கு நாட்டின் உய‌ரிய‌ விருது கிடைத்த‌ பாட‌ல்.

பல்லவி


தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித்தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம் - சிறு
விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே - (தங்கத் தாமரை)

சரணம் 1


செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே - என்
கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே.
தெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே - உன்
கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே.
இருதயத்தினுள்ளே ஒலை ஒன்னு கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க‌?
தொடட்டுமா தொல்லை நீக்க - (தங்கத் தாமரை)


சரணம் 2

பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்.
கனைக்கும் தவளைகள் துணையைச் சேரும் கார்காலம்.
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்.
பிரிந்திருக்கும் உயிரையெல்லம் பிணைத்து வைக்கும் கார்காலம்.
நகங்கடிக்கும் பெண்ணே நடக்காதே ஆசை.
நாகரிகம் பார்த்தால் நடக்காது பூஜை.
நெருக்கமே காதல் பாஷை. - (தங்கத் தாமரை)

0 Comments: