செவ்வாய், 5 ஏப்ரல், 2011

காலஞ்சென்ற பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனுக்கு இந்தப்பதிவு அஞ்சலி

காலத்தால் அழிக்க இயலாத பல பாடல்கள் பாடியவர் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன். 66 அகவையில் இறையடி சேர்ந்தார். எஸ்.பி.பியும், கே.ஜே யேசுதாசும் கோலோச்சிய காலத்திலும், தன்னளவில் அருமையான பாடல்களைக் கொடுத்தவர் இவர். மலையாளத்தினை தாய் மொழியாகக் கொண்டாலும், தமிழ் உச்சரிப்பில் திலகம் இவர். இவர் பாடிய சில பாடல்களை இப்பதிவில் காணலாம்.
இரசினிகாந்த்:
வாவா வசந்தமே (புதுக்கவிதை)
ஆகாயகங்கை (தர்மயுத்தம்)
வாங்கடா வாங்க மற்றும் சில பாடல்கள் (மாவீரன்)
பெத்து எடுத்தவதான் (வேலைக்காரன்)
அதிசயப்பிறவி (அனைத்துப் பாடல்களும்)
மனிதன் மனிதன் (மனிதன்)
கமல்:
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு (16 வயதினிலே)
காதல் வந்திருச்சி [குரலை மாற்றிப் பாடிய பாடல்] (கல்யாணராமன்)
சிவாஜி:
முதல் மரியாதை (அந்த நெலாவத்தான் என்னும் ஒரு பாடல் தவிர‌ அனைத்துப் பாடல்களும்)
விசயகாந்த்:
மஞ்சள் பூசும் (சக்கரைத்தேவன்)
கார்த்திக்:
கட்டிவச்சுக்கோ
சத்யராஜ்:
என்னம்மா கண்ணு (மிஸ்டர் பாரத்)
பிரபு:
சிவி சிணுக்கெடுத்து (வெற்றி விழா)
அடி படகோட்டும் பட்டம்மா (சின்னவர்)
இராமராசன்:
புள்ளி வச்சா (பாட்டுக்கு நான் அடிமை)
ஏ.ஆர்.இரகுமான்:
தென்கிழக்குச் சீமையில(கிழக்குச் சீமையிலே)
காடு பொட்டக் காடு (கருத்தம்மா)
மோனோலிசா (மிஸ்டர் ரோமியோ)
கே.பாக்யராஜ்:
வான் மேகங்களே (புதிய வார்ப்புகள்)
ஏஞ்சோகக் கதைய கேளு (தூறல் நின்னு போச்சு)
முரளி:
ஓபார்ட்டி (இதயம்)
மோகன்:
கூட்சு வண்டியிலே (குங்குமச்சிமிழ்)
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை (சரணாலயம்)

மலேசியா வாசுதேவன் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் தேனாகக் காற்றில் கலந்து என்றென்றும் ஒலிக்கும் என்பது திண்ணம்.

0 Comments: