திங்கள், 20 ஜூன், 2011

காற்றில் ஓடும் ஊர்தி கண்டுபிடிப்பு


பொள்ளாச்சி. ஏப்ரல் 17. பெட்ரோல் விலை உயர்வு, ஊர்தி விலை அதிகம், சுற்றுச்சூழல் மாசுபடுதல் உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு கோவை கருமத்தப்பட்டி தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர்கள் தீர்வு கண்டுள்ளனர். இன்று உலகம் முழுவதிலும் மக்களைப் பெரிதும் தாக்கி வருவது சூழல் மாசுபாடுதான். மாசுபாட்டைக் குறைக்க பல்வேறு நாடுகளும் பல பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

3 மாதம் இடைவிடாத முயற்சியின் காரணமாக 35000உரூபாய் செலவில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் ஊர்தியை அமைத்தோம். மணிக்கு 35 கி.மி செல்லும் இதற்கு ஆண்டுக்கு பராமரிப்புச் செலவு 2000உரூபாய் மட்டுமே. இதிலிருந்து புகையும் வராது. சூழலும் மாசுபடாது. நாம் செல்லும் வழியில் எங்காவது ஒரு மிதிவண்டிக் கடையில் நிறுத்தி ஊர்தியின் பின்புறத்தில் இருக்கும் பெட்டியில் காற்றை நிரப்பிக் கொண்டு பயணத்தைத் தொடரலாம். இவ்வாறு மதன்குமார்(21) கூறினார்.

நன்றி தினகரன்.

0 Comments: