திங்கள், 20 ஜூன், 2011

நாப்பழக்கச் செழுங்கவிதை


அண்டமெல்லாம் பற்றுறுதி கொண்டு கற்றறிய‌
பொங்குதமிழ் தொட்டெழுதிப் படைக்கின்றேன்
புதுவிருந்து யான் உற்றறிந்ததை.

உற்றறிந்ததில் ஊறு காணாமல்
சிற்றறிவு பேரறிவு பிணக்கில்லாமல்
பற்றிடுவீர் தமிழ் சுவைஞர்களே!

சுவைஞர்களே அமிழ்தஞ்சுவையறிய‌
செப்புங்கள் "தமிழ் தமிழ்" என்று
பிழையறாது இடையறாது.

0 Comments: