செவ்வாய், 22 செப்டம்பர், 2009

சில திரைப்படத் திறனாய்வுகள்

நினைத்தாலே இனிக்கும்:

கல்லூரி நட்பு, காதல், பகைமை ஆகியன காட்டும் இக்கால பாடல் நடனங்களுடன் அமைந்த ஒரு படம். புதிதான என்ற செய்தி ஒன்றுமே படத்தில் இல்லாதிருந்தும், நம்மை அமர்ந்து பார்க்க வைப்பது திரைக்கதையும், சில நகைச்சுவைகளுமே. மிகப்பெரிய செய்திகள் இல்லையெனினும், சில நிகழ்வுக்கோர்வைகளே படத்தைத் தாங்கியிருக்கின்றன. விளம்பரம் வேறு அதிகம்.

படத்தில் நம்பமுடியாதது, உடனிருக்கும் நண்பனைக் கொன்று விட்டு, அவன் தான் என்று தெரியாது என்று தலைவன் சொல்வதுதான். இங்கேதான் இயக்குநர் சறுக்கிவிட்டார்.

சில நெருடல்களைத் தவிர்த்து விட்டு வேறு ஏதேனும் புதிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் பார்த்தால் படம் நன்றாக இருப்பதாகவே தோன்றும்.
சர்வம்:
இதேந்திரனின் இதய கொடையினை பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்ட படம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
இருப்பினும் இதயக் கொடை என்னும் சாரம் சரிவர அமைவுராமல், திரைக்கதையானது பொதுவாக அமைந்த அடிப்படை இயல்பூக்கங்களான வன்முறை, பழிவாங்கல்கள் என்பவற்றிலேயே சுழல்வது சராசரிக்கு மேல் உள்ள என் போன்ற சுவைஞர்களுக்கு வருத்தமளிப்பதாகவே அமைகிறது.

பிறகென்ன, தந்தையின் பழம்பாடல்களைச் சுட்டு இசையமைக்க மகன், ஒளிஓவியம் தீட்ட, படத்தொகுப்புச் செய்ய இந்தியாவின் உயரிய கலைஞர்கள் பணியாற்றியிருக்கின்றார்கள்.

காதலிக்க நடனமாட தலைவி,ம்ம்.. அவர் மருத்துவராம். நம்பமுடியவில்லை. பழிவாங்க சண்டையிட‌ தலைவன் என செல்கிறது திரைக்கதை. தலைவன் உச்சரிப்பைத் திருத்தி குரலினை உயர்த்தியிருக்க வேண்டும். செய்யவில்லை.

என்னைக் கவர்ந்தவை இசையரசரின் பழைய இழுவைக்கருவி இசையும், ஒளிஓவியமுமே. பானைச் சோற்றுக்குப் பதமான சிலவற்றை அறிய தொடுப்புக்கள் கீழே.

http://pnapenglish.blogspot.com/2009/09/sarvam-tamil-movie-stills-iii.html
http://pnapenglish.blogspot.com/2009/09/sarvam-movie-stills-ii.html
http://pnapenglish.blogspot.com/2009/09/sarvam-tamil-movie-stills.html

விரைவுத் துப்பாக்கி முருகன் (குயிக்கன் முருகன்):

நகைச்சுவை என்ற பெயரில எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், சில இடங்களில் மட்டுமே சிரிப்பினை வரவழைப்பது சற்று ஏமாற்றமே. அதற்குக்காரணம் இதைவிட நகைச்சுவையான படங்கள் ஏற்கனவே தமிழில் வந்துவிட்டன. வடிவேலுவை விடவா வேறு ஒருவர் இந்நாட்களில் உரையாடல் நகைச்சுவை செய்து விட முடியும்.

ஒரு பாத்திரங்களின் பெயர்கள் மட்டுமே நகைச்சுவை தருவதாக அமைகிறது. அதுவும் சில நேரங்களுக்கு மட்டும்தான். தண்டச்சோறு தின்ன குண்டராமன் என்று சொன்னால் குழந்தைகள் மட்டுமே சிரிப்பார்கள் என்பதை ஊரே அறியுமல்லவா? அது போலத்தான் எல்லா உரையாடல்களும்.

திரைப்படத்தை கிண்டல் செய்து எடுத்த படங்கள் மிகச்சில மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வகையில் திரையரங்கு சென்று பார்க்கும் வகையில் இப்படம் கிடையாது. ஏதேனும் இலவசமாகக் கிடைத்தால் வேண்டுமானல் பார்க்கலாம்.

மதுரை நிகழ்வு: (மதுரைச்சம்பவம்)
பின்னணியில் இருக்கும் தலைவன் முன்னணி ஆக மிகவும் முயற்சி செய்து எடுத்திருக்கும் படம். பயன் வேறென்ன வீண்தான்.

சண்டையிட தலைவன். முத்தமிட, நடனமிட தலைவிகள், இரட்டைப் பொருள் தரும் வார்த்தைகள் பேச துணை நடிகர்கள். இதுதான் மதுரை நிகழ்வு.

படம் தொடங்கி சில நேரத்திற்கெல்லாம் தன்னாலே சிரிப்பு வருவதை அடக்கவே முடியவில்லை. அவ்வளவு சிரிப்பு; அரைகுறையான படத்தைப்பார்த்தால் சிரிப்புத்தானே வரும். மதுரை வழக்கை தலைவன் சரிவரப் பேசியிருந்தால் சிறப்பாயிருந்திருக்கக்கூடும். திறனாய்வில் நிழற்படம் அமைத்தாயிற்று. திறனாய்வு முற்றிற்று.

மாதவி:
ஏதோ ஒரு குழு படமெடுத்துப்பழகிக் கொண்டிருக்கிறது. அடுத்த படம் சிறப்பாக எடுக்க வாழ்த்துக்கள். அடுத்த படம் வேறு எடுக்க வேண்டுமா என்கிறீர்களா? சரி. ஒரு வழியாக மாதவி படத்தை திறனாய்வு செய்தாயிற்று.

0 Comments: