ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

கூகுளுக்கு இன்று அகவை பதினொன்று

எதைத் தட்டினாலும் விடை கிடைக்கும் கூகுள் தேடுபொறிக்கு இன்று அகவை பதினொன்று. 1998 ஆம் ஆண்டு செப்தம்பர் திங்கள் 27 ஆம் நாளில் தான் இது சந்தைக்கு வந்தது. அன்று சில கோடி பக்கங்களை மட்டுமே தன்னகத்தே வைத்திருந்த இது தனது தொடக்க நிலை பொறியாக பென்டியம் 2 கணினியினையும், 512 எம்பி நினைவகத்தையுமே பயன்படுத்தியது.

இன்று கோடிக்கணக்கில் இதன் சேவைக்குழுக்கள் இயங்குகின்றன. இது ஒரு இணைய இயங்குதளமாக விளங்குகிறது. இதன் அடையாளச்சின்னங்களை திறம்பட ஆயத்தம் செய்யும் பள்ளிச்சிறுவர்களுக்கு பரிசிலும் தந்து ஊக்குவிக்கிறது. அதனால்தான் புத்தம்புது சின்னங்கள் அவ்வப்போது மிளிர்கின்றன.

தனது தேடுதுளிநிரல்கள் மூலம் செய்திகள் பெற்று பக்க சேகரிப்பு நிரல்களை கொண்டு கூகுளில் செய்திகள் அன்வயப்படுத்தப்படுகின்றன. முழு இணையத்தின் மூன்று படிகள் கூகுளில் உண்டு.

1. ஒன்று நமக்குக் காண்பிக்கப்படும் குறிப்பிட்ட செய்திகள் கொண்ட தரவுத்தளம். இது தற்காலிகமானது.
2. இரண்டாவது நிலையான செய்திகளிருக்கும் தரவுத்தளம். இதிலிருந்தே தேடப்பட்டு ஒன்றாவதற்கு செய்திகள் தற்காலிகமாக அனுப்பப்படுகின்றன.
3.தேடுதுளிகள் கொண்டு தேடப்பட்ட செய்திகளில் உறுதியாக மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணமே இருக்கும். ஏனெனில் உரியவர்கள், இணையதள உரிமையாளர்கள் எப்பொழுதும் இணையத்தில் ஏற்கனவே உள்ள தங்கள் செய்திகளை மாற்றம் செய்து கொண்டே இருப்பார்கள் அல்லது மேம்படுத்துவார்கள். அவையெல்லாம் இங்கேதான் ஒருங்கிணைக்கப் படுகின்றன.புத்தம்புது செய்திகள் இணையத்தில் வந்தவுடன் இங்கேதான் வந்தடைகின்றன. ஆக ஒட்டுமொத்த மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த இணையமே இந்த தரவுத்தளத்தில் உண்டு.

மேற்காணும் படம் தேடுதல் முறைமைகளை எளிதில் காட்டுகிறது.

1 Comment:

தங்க முகுந்தன் said...

அருமையான பதிவு! தகவலுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!