செவ்வாய், 17 ஜனவரி, 2012

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: இளமைக் காலங்கள்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: இளையராஜா
பல்லவி
ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும்
ஏங்காதே என் அன்பே ஏங்காதே – 2
சரணம் 1
என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்திவிட்டுப் போகும் -2
உன் வாசலில் என்னைக் கோலம் இடு
இல்லையென்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே.. ஏ...
உன் போல என் ஆசை தூங்காது ராணி
தண்ணீரில் தள்ளாடுதே தோணி - ஈரமான
சரணம் 2
நேரம் கூடி வந்த வேளை நீ
நெஞ்சை மூடி வைத்த கோழை – 2
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப்பிள்ளை
என் காதலி.. இ..
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடி வா சிந்து -ஈரமான

0 Comments: