வியாழன், 11 மார்ச், 2010

நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

"நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்." என்று ஒரு சொலவடை உண்டு. 
விளக்கம்:
"கல்லில் வடிக்கப்பட்டிருந்த நாயின் சிலையினை, நாய் என்று நினைத்துப் பார்த்தால் அது நாய். கல்லென்று நினைத்துப் பார்த்தால் அது கல்." என்பது விளக்கம்.
மறுப்பு:
இதை இக்காலச் சிறார்கள், நாய் வருகின்றது, கல்லை எடுத்தால் அது ஓடிவிடும். ஆகவே நாயைக் கண்டால் கல்லைக், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்பர்.
தவம்:
நாயாக வடிக்கப்பட்ட சிலையே உயிர் கொண்டு எழுந்து குரைக்கும் என்றெண்ணி தவம் செய்தால், அந்தக்கல்லும் நாயாக மாறும் தருணம் வந்தே தீரும் என்பது தவம். அவ்வாறு குரைக்கும் கால் அஃது கல் அன்று; கடவுள்.

0 Comments: