புதன், 26 மே, 2010

கற்க,கற்க

பாலிண்ரோம்  (திருப்பிப் போட்டாலும் அதே சொல், பொருள் வரும்.) என்ற வார்த்தை ஆங்கிலத்திலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இதற்கிணையாக தமிழிலும் வார்த்தைகள் உண்டு.

"விகடகவி"
,"தேரு வருதே".
"சிவா நீ வாசி."

போன்றவை எடுத்துக்காட்டுகளாகும்.
தமிழில் இவற்றைச் சரளமாக அமைக்க ஒற்றெழுத்துக்கள் தடையாக இருக்கின்றன.
தமிழில் ஒற்றெழுத்துடன் கூடிய ஒரே ஒரு பாலிண்ட்ரோம் "கற்க" மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் "காக்கா", "பாப்பா", "தாத்தா" போன்றவைகளும் பாலிண்ட்ரோம்கள்தாம் என்பதை பின்னாளில் அறிந்து கொண்டேன்.

0 Comments: