புதன், 8 செப்டம்பர், 2010

மென்பொருள் உரிமை நாள்.

செப்டம்பர் 18 மென்பொருள் உரிமை நாள்.

மென்பொருள் உரிமை நாள் வரும் பதினெட்டாம் தேதி நடக்க உள்ளது.
இது ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் மூன்றாம் சனிக்கிழமை உலகெங்கிலும் கொண்டாடப் படுகின்றது.

குறிக்கோள்கள்

1. மென்பொருள் உரிமையையும் அதற்காக உழைப்பவர்களையும் கொண்டாடுவது.
2. மென்பொருள் உரிமை பற்றிய பொதுவான புரிதலை உருவாக்கி, கட்டற்ற மென்பொருட்களையும்,
பொதுவான தகுதரங்களையும் பயன்படுத்த மக்களை ஊக்குவித்தல்.
3. எல்லாருக்கும் கிடைக்கக் கூடிய எல்லோரும் பங்கெடுக்கக் கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்துவது.
4. உருவாகி வரும் தகவல் சார்ந்த சமூகத்தில் பொறுப்புக்களையும் கடமைகளையும் பற்றிய விவாதங்களையும்
ஊக்குவித்தல்.
5. இதே நோக்கத்தை கொண்டுள்ள நிறுவனங்களுடனும், தனி ஆட்களுடனும் இணைந்து செயல்படுதல்.

மேலும் செய்தியறிய கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கவும்.
www.softwarefreedomday.org

நன்றி தமிழ் கம்ப்யூட்டர்.

0 Comments: