சனி, 13 மார்ச், 2010

எழுதிச் செல்லும் விதியின் கை எழுதியெழுதி மேற்செல்லும்.

நேர்மைப் புரட்சி ஏற்படுங்கால், அச்சுறுத்தும் தன்மை நீங்கி விடும். அரசாட்சி ஏற்படும். அங்கே எல்லோரும் அரசர்கள்தாம். முதல்வரும் பேருந்தில் பயணம் செய்வார் மக்களோடு மக்களாக. தமிழ் பேசுவார். நடுவண் அமைச்சரும் தூய தமிழ் கற்றுக் கொண்டு பேசுவார் எப்பொழுதுமே. நேர்மைப் புரட்சி ஏற்படின் பிணமும் தமிழ் பேசும். அச்சுறுத்தல் தன்மை வேரறும். எழுதிச் செல்லும் விதியின் கை எழுதியெழுதி மேற்செல்லும். கை யாருடையது. கை கடவுளுடையது.

வியாழன், 11 மார்ச், 2010

நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

"நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்." என்று ஒரு சொலவடை உண்டு. 
விளக்கம்:
"கல்லில் வடிக்கப்பட்டிருந்த நாயின் சிலையினை, நாய் என்று நினைத்துப் பார்த்தால் அது நாய். கல்லென்று நினைத்துப் பார்த்தால் அது கல்." என்பது விளக்கம்.
மறுப்பு:
இதை இக்காலச் சிறார்கள், நாய் வருகின்றது, கல்லை எடுத்தால் அது ஓடிவிடும். ஆகவே நாயைக் கண்டால் கல்லைக், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்பர்.
தவம்:
நாயாக வடிக்கப்பட்ட சிலையே உயிர் கொண்டு எழுந்து குரைக்கும் என்றெண்ணி தவம் செய்தால், அந்தக்கல்லும் நாயாக மாறும் தருணம் வந்தே தீரும் என்பது தவம். அவ்வாறு குரைக்கும் கால் அஃது கல் அன்று; கடவுள்.

புதன், 10 மார்ச், 2010

அமிபா கதை

பழந்தாழியிலிருந்து
புதுக்குரல் ஒன்று கேட்டது
"நான் நான்" என்று.

பின்பு அஃதே
"நாம்" என்று எதிரொலித்தது நன்று.

வியாழன், 4 மார்ச், 2010

நான்

அவரைப் பற்றித்தான் பேசுகிறார்களாம் - ஆனால்
அவருக்குத் தெரியவில்லையாம் - அவர்
குழந்தையா?
பிணமா? - இல்லை
அவர் கடவுள்.

செவ்வாய், 2 மார்ச், 2010

நானின் தற்போதைய தருணம்.

தன்மையுடையவனாயிருந்தும்
முன்னிலையில் விளிக்காமல்
படர்க்கையில்  விளிக்கிறார்கள் ப‌லர்.

என் படர் கை பார்ப்பின்
முன்னிற்காமல்
தன்மையடைவர் சிலர்.

தமிழிலக்கணப்படி
"நான்" தன்மையே.
அது படர்க்கையானது பெருவியப்பே.

தன்மையினை படர்க்கையாய்
விளித்தமையால்

தன்மையா?
முன்னிலையா?
படர்க்கையா?
என விழிக்கிறது நான்.

"நாம்" என்பதே "நான்" ஆகிய பிறகு,
நானை, "நாம்" என்று விளிப்பதே தகும்.