சனி, 28 பிப்ரவரி, 2009

மெய்யான முத்தாய்ப்பு

ஒன்றின் கீழொன்றாய்
ஏதேதோ எழுதி
கழித்தேன் பொழுதினை
பணியில்லா இருப்பினை ஆற்ற‌;
எழுதி முடித்துப்
பார்த்தால் பிறந்தது
முத்தாய்ப்பில்லாத
முக்கால் கவிதை.

க‌விதைக்கு அணியே
முத்தாய்ப்புத்தான்
அஃதே இல்லையே
என் செய்வேன் யான்?
எழுதினேன் உன் பெய‌ரை.
"அம்மா"

0 Comments: