ஞாயிறு, 30 நவம்பர், 2008

தமிழிலும் நான் வருகிறேன். பா.நி.ஆ.பிரசன்னா

கூகுளில் அதாவது கூகுள் தேடலில் இதுவரையில் நான் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் மட்டுமே வந்து கொண்டிருந்தேன். தமிழில் பா.நி.ஆ.பிரசன்னா என்று தட்டச்சுச் செய்தாலும் இப்போது வருகிறேன். தற்செயலாக ஓய்வு நேரத்தில் தட்டச்சு செய்ய அது இவ்வாறாக பெயர் ஏற்படுத்தித் தருகிறது. கூகுள் வாழ்க!! பா.நி.ஆ.பிரசன்னா

வியாழன், 27 நவம்பர், 2008

அச்சுறுத்துவோரை அழிக்க வழியே இல்லையா?

அச்சுறுத்துவோரை அழிக்க வழியே இல்லையா?

மும்பையில் 26/11/2008 அன்று நடந்த தாக்குதல்களைப் பார்த்து கொடுஞ்சினங்கொண்டு எழுதுங்கட்டுரை இது. சினங்குறைய மேல்நாட்டு இசைமேதையின்1 இசைக்கோவைக்2 கேட்டுக்கொண்டே எழுதுகிறேன் இஃதினை.

---

அச்சுறுத்துவோர்3 (இழிவினத்தோரைக்கூட எந்தமிழ் எப்படியழைக்கிறது பாரீர்!) ஊடுருவலால் மும்பையில் நடந்ததை செய்தி அலைவரிசையில் கண்டால் கூட ஏதோ திரைப்படம் பார்ப்பது போன்றிருக்கிறது. சில இடங்களில் திரையினையும் மிஞ்சிவிட்டது நடப்பு. நாம் எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? காந்தி பிறந்த மண்ணிலா? என்றெண்ணம் மேலோங்கி ஒலிக்கிறது எல்லோர் மனதிலும். இவர்களை அழிக்க வழியே இல்லையா? பட்டாளத்தினர்4 விரைந்து வந்து எல்லையில் நாட்டைக் காப்பதினை விடுத்து ஊடுருவிய அச்சுறுத்துவோரைத் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எண்ணிலா வருத்தம் பீறிடுகிறது தமிழ் கூறும் நல்லுலகோர் நெஞ்சில்.

---

இவ்வச்சுறுத்தத்தினை ஒரு குறிப்பிட்ட குமுகாயத்தினர்5 செய்கின்றனர். அதற்கு அவர்கள் வைக்கும் பெயர் புனிதப்போர். நல்லகாலம் அவர்கள் தமிழ் பேசவில்லை. ஏனெனில் தமிழில் புனிதப்போர் என்பதற்கு பொருள் வேறு.

---

இன்று மும்பையில் நடந்தது நம் ஊருக்கு வர எத்தனை காலம் பிடிக்கும் என்ற அச்சம் அனைவர் மனதிலும் எழுவது உண்மைதான். இவ்வச்சுறுத்தற்காரர்கள் பொதுமக்களைக் குறி வைத்துத் தாக்குவதுதான் பெரும் வருத்தத்தினைத் தருகிறது.

---
அச்சுறுத்தற்காரர்களால் ஏற்படும் தீவிளைவுகள்:


  1. ஒட்டு மொத்த உலகத்தினையே தங்கள் பக்கம் இழுத்து வேறு எந்த வேலையையும் செய்யவிடாதிருத்தல்.(பாருங்கள்! நான் கூட வேறு வேலையிருந்தும், வேலை செய்ய மனமின்றி இதை பெரிதாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.)

  2. இவர்களிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்ள பாதுகாப்பு வழிமுறைகள் நாம் தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தல். (எண்ணிலா காவல் துறையினர், பட்டாளத்தார் இதனையே பார்த்துக் கொண்டிருத்தல்.)

  3. தீவினைகளை அவ்வப்போது கண்கூடாக விளைவித்தல்.

  4. பணயக் கைதிகளாக சிலரைப் பிடித்துக் கொண்டுr அரசைப் பணியவைத்தல். அவ்வாறு பணியாத போது, பணயக் கைதிகளை கொடூரமாகக் கொன்று விடுதல்.

  5. நம்மருகாமையிலிருக்கும், அண்ணன் தம்பி போல் பழகிவரும் இக்குமுகாயத்தினரின் மீது நமக்கு ஐயம் ஏற்படுத்துதல், நமக்கும் அவர்களுக்கும் இருக்கும் சமய நல்லிணக்கத்தைக் கலைத்தல்.

எப்படியும் அச்சுறுத்தர்காரர்களை, அச்சுறுத்தல் முறைமைகளை6 ஒழிக்க வேண்டும். அதற்கான முறை, வழிகளை கண்டறிதல் வேண்டும். அரசு கண்டறியுமா? பொதுமக்கள் வாழ்வு காக்கப்படுமா? வல்லரசுகள் இதனைக் கண்டு கொள்ளுமா?

ஒரு கட்டுரையின் மூலம் சிறு கல் எரிகிறேன். என்னோடு நிறைய கற்கள் வந்தால் பாதுகாப்பாக ஒரு கோட்டை கட்டலாம். இல்லையேல் வெறும் கல் மட்டுமே இருக்கும்.

---

பா.நி..பிரசன்னா.

1Mozart

2symphony

3Terrorists

4military

5Muslims

6terrorism

செவ்வாய், 25 நவம்பர், 2008

அம்மா


திங்கள், 24 நவம்பர், 2008

கூகுளில் நான் வருகிறேன்

கூகுள் வலைமனைக்குச் சென்று என் பெயரைத் தட்டச்சுச் செய்தால் நான் செய்த வலைப்பூக்கள் என்னைக் காட்டிக் கொடுக்கின்றன. என்னை உலகிற்குக் காட்டிய தொழிற்நுட்பத்திற்கு நன்றி.  


பிரசன்னா.

http://pnaprasanna.blogspot.com
http://pnappix.blogspot.com
http://pnaptamil.blogspot.com
http://pnapenglish.blogspot.com
http://pnaplinux.blogspot.com
http://pnaprasanna.blog.co.in

பென்ஹர் (Benhur)

பென்ஹர்

பென்-ஹர் திரைப்படம் பல ஆண்டுகளுக்கு(1959) முன்பு எடுக்கப்பட்டிருப்பினும் அதன் நேர்த்தி நம்மை இன்னும் வியக்க வைக்கிறது. பதினொரு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற முதல் திரைப்படம் என்பது படத்தின் மற்றொரு சிறப்பு. மூன்று மணிநேரம் இருபத்து ஆறு மணித்துளிகள் ஓடும் இப்படத்தினை மென்பொருள் உதவி கொண்டு எளிமையாகக் காணமுடிகிறது. படத்தில் ஒவ்வொருவரின் உழைப்பும் தென்றென விளங்குகிறது. இசை அக்கால தொழிற்நுட்பத்துடன் ஒலிக்கிறது. ஒவ்வொரு காட்சியும் தெள்ளிய நீரோடை போன்று பதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு அல்லது மூன்று ஒளிக்கருவிகள் (பெரும்பாலும் இரண்டுதான்) ஒரு காட்சியினை பதிவது இந்நாட்கள் சுவைஞர்களால் எளிதில் உணரப்படுகிறது.

---

படம் மெதுவாகத் தொடங்கி சிறிது சிறிதாக விரைவாகிறது பின்பு மெதுவாகிறது பின்பு விரைவாகிறது. குறிப்பிட்ட சில காட்சிகளை மென்பொருள் வரைகலை இல்லாத அக்காலத்தில் வெறும் கலை மட்டும் கொண்டு எடுத்திருப்பதுதான் படத்தின் மேன்மை பொருந்திய தன்மையாகும். எடுத்துக்காட்டாக இரண்டு காட்சிகள். அடிமைகள் கப்பல் இழுப்பது, குதிரைப்பந்தயம். இனிமேல் இதுபோன்ற காட்சிகளை வெறும் கலை மட்டும் வைத்துக்கொண்டு மென்பொருள் வரைகலையின்றிச் செய்வது சாத்தியமேயன்று என்று சொல்லவைக்கிறது. படம் கி.பி.26ல் தொடங்கி இயேசுநாதர் காலத்தில் நடக்கிறது. இயேசுநாதர் பென்-ஹருக்குத் தண்ணீர் கொடுக்கிறார். மலைபொழிவு நடத்துகிறார். எல்லாம் தொலைவிலேயேதான் நடக்கிறது.

---

இறுதியில் சிலுவை சுமக்கும் பொழுது பென்-ஹர் அவருக்குத் தண்ணீர் கொடுக்கிறது போல் வரலாற்று நிகழ்வினையும் கற்பனையையும் கலந்தாற் போன்று செல்கிறது கதை. (தசாவதாரம் தமிழில் வரலாற்று நிகழ்வோடு கோர்த்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்பதறிக.) இயேசு செல்லும் வழியில் இருக்கும் தொழுநோயால் இன்னலுறும் பென்ஹரின் தாய், தங்கை இருவரும் குணமடைவது கிறித்தவர்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை.

---

இது போன்ற படங்களைப் பார்த்து அவ்வப்போது தங்கள் அறிவினையும் நடிப்புத்திறனையும் இக்கால நடிகர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். அக்கால‌ நடிகர்கள் அவ்வளவு தேர்ந்த நடிப்பினைக் காட்டுகிறார்கள்.

---

இத்தனை நாட்கள் தாண்டியும் இதைப்பற்றி திறனாய்வு செய்யத்தூண்டும் வண்ணம் எடுத்திருப்பதுதான் கலையின் விலை. கலையின் வெகுமானம். பின்னாளில் எடுக்கப்பட்ட டைட்டானிக், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்கள் கூட இந்த பதினொரு ஆஸ்கர் விருதுகள் வாங்கி நிகரடைய நிறைய மெனக்கெட்டிருக்கின்றன. ஆனாலும் மென்பொருள் வரைகலையின்றி அக்காலத் தொழிற்நுட்பத்தில் செய்யப்பட்ட இப்படம் காலத்தால் அழிக்க இயலாதது என்பதில் ஐயமில்லை.

---

படுக்கயறைக் காட்சிகள் இல்லை. கெட்ட வார்த்தைகள் இல்லை. நாயகன் இயற்கை இறந்த நிகழ்வுகள் எதுவும் செய்யாமல் நாயகனாக விளங்குகிறார். சற்று மேம்பட்ட நிகழ்வுகள் அவரால் செய்யப்படினும் அதற்கு அவர் தகுதியானவர் என்றே எண்ணத் தோன்றுகிறது. நல்லபடம் பார்த்த நிறைவு கிடைக்கிறது. குதிரைப்பந்தய காட்சிக்காக இப்படத்தினை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.

சனி, 22 நவம்பர், 2008

இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அழைப்பு

இந்திய .டி. நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அழைப்பு
வெள்ளிக்கிழமை, நவம்பர் 21, 2008  

    


சென்னை: இந்திய ஐடி துறையை அமெரிக்கா கைவிட்டாலும் மற்ற உலக நாடுகள் தொடர்ந்து ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றன.


குறிப்பாக ஆஸ்திரேலியா, தங்கள் நாட்டுக்கு ஐடி தொழில்நுட்ப நிபுணர்களை அதிகம் அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்திய பொருளாதார தேக்க நிலையால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்திய பீபிஓ துறையுடனான தங்கள் வர்த்தகத் தொடர்புகளை நிறுத்திக் கொண்டுள்ளன. இதனால் பல நிறுவனங்களின் வருவாயும், லாபமும்  வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுநாள் வரை, அமெரிக்காவுக்கே அதிக அளவில் சேவைகளை வழங்கி வந்தன. இப்போது அமெரிக்காவே ஆட்டங்கண்டு விட்டதால், இந்த வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இச்சூழ்நிலையில்இந்திய ஐடி நிபுணர்கள் மற்றும் இடைநிலை ஊழியர்களுக்கு ஆஸ்திரேலியா அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக பீபிஓக்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கத் தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சர்வதேச பொருளாதார தேக்க நிலை, ஆஸ்திரேலியாவை அதிகம் பாதிக்கவில்லை அந் நாட்டின் பல்வேறு துறைகளின் தொழில்நுட்ப தீர்வுகளுக்கு இந்திய நிறுவனங்கள் சேவைதான் இப்போது அதிகம் தேவைப்படுகிறது.

இதற்கு முன்பும்கூட அதிக ஐடி வல்லுநர்கள் ஆஸ்திரேலியாவுக்குத் தேவைப்பட்டார்கள். ஆனால் அப்போது இந்திய ஐடி நிறுனங்கள் அமெரிக்கா-ஐரோப்பாவுக்கே முன்னுரிமை அளித்து வந்தன.

'
ஆஸ்திரேலியாவின் பீபிஓ துறையின் சந்தை மதிப்பு 400 கோடி டாலர். அங்கு, தொழில்நுட்ப நிபுணர்களுக்கு இப்போதும் பற்றாக்குறை உள்ளது. இந்திய நிபுணர்களுக்குத் தரும் தொகையை விட, ஆஸ்திரலிய நிபுணர்களுக்கு பல மடங்கு சம்பளம் தரவேண்டும் என்பதால், ஆஸ்திரேலிய நிபுணர்களின் முதல் சாய்ஸ் இந்தியாவாக உள்ளது' என்கிறார் இந்தோ-ஆஸ்திரேலிய வர்த்தக சபைத் தலைவர் சரத்சந்திரன்.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு தகவல் தொழில்நுட்பச் சேவை அளிக்க இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளன. குறிப்பாக, சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பீ.பி.. பிரிவான சுந்தரம் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனம், ஆஸ்திரேலிய நாட்டு நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளை அளித்து வருகிறது. இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில் 10 சதவீதம் ஆஸ்திரேலியாவிலிருந்து பெறப்படுவது குறிப்படத்தக்கது.