செவ்வாய், 16 டிசம்பர், 2008

என்னைக் கவர்ந்த பாடல்

என்னைக்கவர்ந்த பாடல்


படம்: உழவன்

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பாடல்: வாலி

நடிப்பு: பிரபு, பானுப்ரியா, ரம்பா

இசை: .ஆர்.ரஹ்மான்

இயக்கம்: கதிர்

பல்லவி

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ

சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ

கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ

சிரிப்பு மல்லிகைப்பூ


சிறுகைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ-அவள்

கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ

மைவிழி ஜாடைகள் முல்லைப்பூ

மணக்கும் சந்தனப்பூ


சித்திரமேனி தாழம்பூ

சேலையணியும் ஜாதிப்பூ

சிற்றிடை மீது வாழைப்பூ

ஜொலிக்கும் செண்பகப்பூ - பெண்ணல்ல...


சரணம் 1

தென்றலைப் போல மிதப்பவள் -எனைத்

தழுவக் காத்துக் கிடப்பவள்

செந்தமிழ்நாடுத் திருமகள் -எந்தன்

தாய்க்கு வாய்த்த மருமகள்.

சிந்தையில் தாவும் பூங்கிளி -அவள்

சொல்லிடும் வார்த்தை தேன் துளி

அஞ்சுகம் போல இருப்பவள் -கொட்டும்

அருவி போலச் சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து

நடையைப் பழகும் பூந்தேரு

மெட்டியைக் காலில் நான் மாட்ட‌

மயங்கும் பூங்கொடி - பெண்ணல்ல...

சரணம் 2

சித்திரைமாத நிலவொளி -அவள்

சில்லென தீண்டும் பனித்துளி

கொஞ்சிடும் பாத‌ கொலுசுகள் -அவை

கொட்டிடும் காதல் முரசுகள்

பழத்தைப்போல இருப்பவள் -வெல்லப்

பாகைப் போல இனிப்பவள் -சின்ன

மைவிழி மெல்லத்திறப்பவள் -அதில்

மன்மதராகம் படிப்பவள்

உச்சியில் வாசனைப்பூ முடித்து

உலகம் அளக்கும் பூந்தோட்டம்

மெத்தையில் நானும் சீராட்ட‌

பிறந்த மோகனம். - பெண்ணல்ல...


0 Comments: