வெள்ளி, 10 ஏப்ரல், 2015

இரவல் குரல் கலைஞர் இரவீணா இரவி

விரைவாய் முன்னேறி வரும் இரவல் குரல் கலைஞர் இரவீணா இரவி. 22 அகவை நிரம்பாத இவர் பின்னணி குரல் கலைஞர் சிறீஜாவின் மகள். வானபிரஸ்தம் (மலையாளம்) திரைப்படத்தில் குழந்தைக்கு இரவல் குரல் கொடுக்கத் தொடங்கியவர். தமிழில் ஊட்டி படத்தில் குழந்தைக்கு குரல் கொடுத்தவர். சாட்டை படத்தின் மூலம் மகிமாவுக்கு குரல் கொடுக்கத் தொடங்கினார். அனைத்து முன்னணி இயக்குநர்களின் பார்வையிலும் பட்டு இப்போது அதிகமான படங்களுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சமந்தா (கத்தி), எமி (ஐ) , அம்யுரா(அனேகன்) குறிப்பிடத்தக்கவை. இவரது இயல்பான குரல் நிமிர்ந்து நில் படத்தில் அமலா பாலுக்குப் பொருந்தியது. ஐ படத்திற்காக நிறையவே மெனக்கெட்டுப் பேசியிருக்கிறார்.

0 Comments: