வியாழன், 23 ஏப்ரல், 2015

உத்தம வில்லன் பாடலில் வரும் யாழ்

உத்தம வில்லனில் "காதலா கடவுள் முன்..." பாடலில் வரும் இந்த யாழ் என்னை மிகவும் கவர்ந்தது. ஒளிக்கருவியின் கோணமும் மிக அருமை. இரண்டு யாழ்களை தலைவி வாசிப்பது போன்று அமைந்திருக்கும் பாங்கு அருமையானது.
யாழ் மிகவும் பழமையான இசைக்கருவி. ஏறத்தாழ தொழிற்நுட்ப அடிப்படையில் அமைந்த முதல் தந்திக்கருவி அல்லது கம்பிக்கருவி அல்லது நரம்புக்கருவி யாழ்தான். யாழில் பலவகைகள் உள்ளன.
வில்யாழ்(21 நரம்புகளை உடையது)
பேரியாழ் (21 நரம்புகளை உடையது)
மகரயாழ் (17 அல்லது 19 நரம்புகளை உடையது)
சகோடயாழ் (16 நரம்புகளை உடையது)
கீசக யாழ் (14 நரம்புகளை உடையது)
செங்கோட்டியாழ் (7 நரம்புகளை உடையது)
சீறியாழ் (7 நரம்புகளை உடையது)
யாழ் நூலில் கூறப்படும் யாழ் வகைகள்:
வில் யாழ்
சீறி யாழ், செங்கோட்டியாழ்
பேரி யாழ்
சகோட யாழ்
மகர வேல்கொடி யாழ்
மகர யாழ் / காமன் கொடி யாழ்
மகர யாழ் / வர்ணர் ஊர்தி யாழ்
செங்கோட்டு யாழ்
எருது யாழ்
மயில் யாழ்
மயூரி யாழ்
யாழ் சுருங்கி வீணையானது. அதன் பிறகு சிதார், கிடார் என்று ஆகிவிட்டது.

0 Comments: