சனி, 17 ஜனவரி, 2009

தூய மரியன்னை பேராலயத் திருத்தலம், பங்களூரு

பங்களூரில், சிவாஜி நகரில் அமைந்துள்ள இதுவும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள இத்திருத்தலத்தினை காண கண்கள் கோடி வேண்டும். அத்துணை அழகு. உயர்ந்த கோபுரம், குடில்கள், தேர் வருகை என இயேசு பிறப்பு பெருவிழாவினையொட்டி களை கட்டியிருந்தது தூய மரியன்னை பேராலயத் திருத்தலம்.

தமிழ்நாட்டிலிருந்து வந்த எம் அன்னையார், "தம்பீ!! நா அந்தக் கோயில பாத்துட்டு போகலாமின்னு இருக்கேன்..",என்றார்கள். சரி அம்மா என்று நானுந்தம்பியும் என் மனைவியுடன் அவரையும் அழைத்துச் சென்றோம். காற்றுப்பதன‌ப் பேருந்துப் பயணம், சரியாக ஒரு மணிநேரம் பிடித்தது. பேராலயத்திருத்தலம் அடைந்ததும், "தம்பீ இதையெல்லாம், படம் பிடி" என்றார்கள். அந்த பொன் தருணத்தில் நாம் கைபேசி கொண்டு சொடுக்கிய வண்ணங்களைத் தாம் இப்போது இங்கு காண்கின்றீர்கள்.

கடவுள் நம்பிக்கையுடையோர் கடவுளையும், இல்லார் கட்டிடக்கலையையும் சுவைக்கின்றனர். நீங்களும் சுவையுங்கள். அன்று நாங்கள் யாரோ நேர்த்திக்கடன் தீர்க்க இட்ட சோற்றினைச் சுவைத்து பேரன்னையை வேண்டி வீடு திரும்பினோம்.
கடவுளழகையும், கட்டிடக்கலையழகையும் காணக் கண்கள் கோடி வேண்டும்தானே!!!







பதிவிறக்கம் செய்ய‌: http://pnaprasanna.blog.co.in/files/2009/01/shivaji.pdf

2 Comments:

பெயரில்லா said...

கைபேசிக் கொண்டு சொடுக்கிய தூயமரியணை ஆலயம் அருமை.காற்றுப்பதனப் பேருந்து என்பது வொல்வொ தானே

பெயரில்லா said...

The experience which shared in this article was nice.