சனி, 17 ஜனவரி, 2009

என்னைக்கவர்ந்த பாடல்

படம் : புதுப்புது அர்த்தங்கள்

பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பாடல் : வாலி

இயக்குனர் : கே.பாலசந்தர்

இசை : இளையராஜா

நடிகர்கள் : இரகுமான், சிதாரா, கீதா, விவேக்


பல்லவி


கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - என்

பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்.

சுதியோடு லயம் போலவே

இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே - கல்யாண‌

சரணம் 1


வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்

ஆனாலும் அன்பு மாறாதது.

மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்

பிரிவென்னும் சொல்லே அறியாதது.

அழகான மனைவி அன்பான துணைவி

அமைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள் பயில‌

மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி

நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே. - கல்யாண‌

சரணம் 2


கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து

கூவென்று சொன்னால் கூவாத‌ம்மா

சோலை மயில் தன்னைச் சிறை வைத்துப் பூட்டி

ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்

காவல்கள் எனக்கில்லையே.

சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்க‌

சிரிக்காத நாளில்லையே.

துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்

மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே

என் சோகம் என்னோடுதான். - கல்யாண‌ 

1 Comment:

பெயரில்லா said...

மாஎன்னை கவர்ந்த பாடலும் கூட.ஆனால் அந்த அளவுக்கு பாட வருமான்னு தெரியவில்லை. உங்களுக்கு நல்லா பாட வரு.